பெரியார் மோதல் ஆரம்பம்
நடிகர் விஜய் தனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் அவருடன் மோதுவதற்குத் தயங்க மாட்டோம் என்பதையே புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் சிமான் அழுத்திச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். இந்த சந்திப்பில் பேசிய சீமான், ‘’விஜய் அம்பேத்கர் , பெரியார் இவர்களுக்கு மாலையிட்டதை வரவேற்க வேண்டும் . அது போல மறைக்கப்பட்டத் தமிழ் தலைவர்களுக்கும் மாலையிட வேண்டும். அதே போல் தம்பி விஜய் வந்து அண்ணன் செய்றது சாின்னு ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வரட்டும்.. இல்லைனா அவரு வேலைய பாத்துட்டு போகட்டும்’ என்று எச்சரிக்கும் தொணியில் பேசியிருக்கிறார்.
மேலும் இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் குறித்து, ‘’தமிழர்களுக்கு கலை , இலக்கியம் பண்பாடு இவற்றுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல். அமெரிக்க சென்ற முதல்வர் சாதி மதம் கடந்து திராவிடர்களை ஒற்றுமையாக காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஏன் சொல்லவில்லை . தமிழர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும் ? ஏன் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு எவரும் மரியாதை செலுத்தவில்லை .
மாநில சுயாட்சிதான் திமுகவின் உயிர் நாடி – ஸ்டாலின் மதுக் கடை மூடுவதற்கு , சாதிவாரி கணக்கெடுப்பதற்கு ஒன்றிய அரசை நாடும் நீங்கள் மாநில சுயாட்சியின் உயிர்நாடியா ? இந்தியை திணித்தது, கல்வி, மருத்துவம் , சாலை போடும் உரிமையை கொண்டு சென்றது , கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தது ஒன்றிய காங்கிரஸ் அரசு. இவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு மாநில சுயாட்சி உரிமை பற்றி பேசுவது வேடிக்கை’ என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் பெரியார் ஆதரவாளர்களிடம் சீமானுக்கு கடுமையான கண்டனம் வந்திருக்கிறது. பெரியாருக்கு மரியாதை செலுத்தாத சீமான் குறித்து, ‘’இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாளுக்கு மூன்று மாநில முதல்வர்கள், தேசிய கட்சியின் தலைவர் முதற்கொண்டு பதிவு போட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று கட்சி தொடங்கிய விஜய் கூட திடல் சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செய்கிறார். பாஜக மற்றும் நாதக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை. மாறாக சங்கிகளும் சீமான் வளர்த்த ஜோம்பிகளும் விஜயையும் பெரியாரையும் கொச்சைப்படும் வேலையை செய்தார்கள்.
கடந்த ஆண்டுகளில் கூட பெரியாருக்கு புகழ் வணக்கம் கூட்டம் நடத்தி இருக்கிறது நாதக. நிற்க. இதில் சீமான் பேசியதை நுட்பமாக கவனிக்க வேண்டும். பெரியார் தமிழர் இல்லை என்கிறார். நாம் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி ‘இவர் தமிழரா இல்லையா ‘ என்று சொல்ல சீமான் யார்? சீமான் தான் ஒட்டுமொத்த தமிழினத்துக்கு ஓனரா? அத்தாட்சி பத்திரம் கொடுக்க சீமான் யார்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதேநேரம், ‘’என்ன சீமான் பயந்துட்டீங்களா… இன்னமும் நிறைய இருக்கு’’ என்று விஜய் நிர்வாகிகள் சமூகவலைதளத்தில் சண்டையை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.