திருமாவளவனுக்கு பா.ஜ.க. அழைப்பு.

Image

1% ஓட்டு  தான் இருக்குதா..?

மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்கும் அரசியல் கூட்டணியில் பெரும் திருப்பம் நிகழும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட சூழலில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சரண்டர் ஆகிவிட்டார் திருமாவளவன். ஆனாலும், அவருக்கு அங்கு மதிப்பும் மரியாதையும் குறைந்து விட்டது என்று பா.ஜ.க. கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பா.ஜக.வினர், ‘’விசிக குறித்த எதார்த்த நிலை இதுதான். தனியாக நின்றால் 1% வாக்கு. கூட்டணியில் நின்றாள் இவர்களால் 4-5% வாக்கு கூட்டணிக்கு கிடைக்கும். ஆகக்கூடி விசிக ஒரு கருவேப்பிலை கட்சி அவ்வளவே!!! இதில் எங்களை நடுவீதியில் நிற்க வைக்க சதி என்பதெல்லாம் கவைக்கு உதவாத வாதங்கள். கருவேப்பிலையை மணம் கூட்ட உபயோகப்படுத்துவார்கள். சாப்பிடும்போது ஓரமாக ஒதுக்கி வைப்பார்கள் என்பது போலத்தான் பிளாஸ்டிக் சேரில் அமரவைத்து அழகு பார்த்தது எல்லாம் நடக்கும்.

உண்மையான சமூகநீதியுள்ள பாஜகவிற்கு திருமாவளவன் ஆதரவு அளிப்பதுதான் விசிக போன்ற ஜாதிய கட்சிக்கும், உண்மையான சமூகநீதிக்கும் நல்லது. பாஜகவில் தான் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள காலமாகிய 2000-2001 ஒரு பட்டியல் சமூக நபர் தலைவராக வரமுடிந்தது. காங்கிரஸ் தோல்வியடைந்த காலகட்டத்தில் கார்கேவை தலைவராக்கி தோல்விகளுக்கு அவரை பொறுப்பாக்கியது’ என்று எச்சரிக்கையுடன் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

1% ஓட்டு என்று கிண்டல் செய்ததற்கு பா.ஜ.க.வினரை சிறுத்தைகள் கடித்துக் குதறுகிறார்கள்.

Leave a Comment