காம மூலிகை தெரியுமா?

Image

வெற்றிலை மகத்துவம்


தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது  ‘தாம்பூலம்’ எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்துச் சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு. வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி, ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்துவிடுவான் தமிழன்.
வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா, பாட்டி காலத்தில் கேன்சர் இல்லை; சர்க்கரை வியாதி இல்லை; இதயநோய்கள் இல்லை. முக்கியமா, மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக, வெற்றிலை பாக்கு என்பது காம உணர்வு தூண்டி நரம்புக்கு வலிமை சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கலாச்சார சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்டபழக்கமாகச் சித்தரித்து தமிழ் இனத்தை நோயாளிகளாய் அலையவிட்டிருக்கிறது. வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை, கருத்தரிப்பு மையங்கள் நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.
வாயில் கேன்சர் வந்துவிடும்; பற்களில் கரை போகவே போகாது; தவிர, டேய் இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு எனச் சொல்லிச்சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டே விட்டது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி போடுவார்கள். அது மட்டுமா? ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய் என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டுச் சுவைப்பார்கள். முதலில் ஊறும் நீரையும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றாவது ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், ‘ஆங் தாம்பூலமா… அப்புடின்னா’ என்ன எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்துவிட்டது,
பெருகிவரும் ஆண் மலட்டுத் தன்மை, குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் இயக்கம் குறைதல் ஆகியவற்றுக்கு தாம்பூலம் மிகச் சிறந்த மருந்து.வெற்றிலையில் உள்ள ஹைட்ராக்ஸி சாவிகால் எனும் பீனால் கலவையானது, ஆண்களின் புரோஸ்டேட்டை வலுபடுத்துகிறது. மேலும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல்கொண்டது. விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு  புரோஸ்டேட்டில் இருந்து சுரக்கும் நீரில் உள்ள துத்தநாகம் மூலம்தான் உயிரே கிடைக்கிறது. அதாவது, இயக்கமே உண்டாகிறது.

ஐ.வி.எஃப் நிகழ்வில் விந்தின் கொள்ளளவு நிகழ்வும் முக்கியம். அந்த கொள்ளளவு நடக்க புரோஸ்டேட் சுரப்பு ரொம்ப முக்கியம். இதையெல்லாம் தெரிந்ததால்தானோ என்னவோ, காதல் மனைவி ஊட்டிவிடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசி இருக்கிறார்கள்போல,
மலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கை சேர், வாய் நாற்றமா வெற்றிலையை சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமூகம், இன்று கருத்தரிப்பு மையங்களில் முடங்கிக் கிடக்கிறது. அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூல மகத்துவத்தை எடுத்து உரைப்போமே. 

Leave a Comment