• Home
  • தமிழ் லீடர்
  • அறிவாலயத்தில் பிரியாணி, உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை

அறிவாலயத்தில் பிரியாணி, உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை

Image

சைவத்துக்கு மாறிட்டாரா ஸ்டாலின்.?

சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் பிரியாணி, சிக்கன் என்று தடபுடல் விருந்து நடைபெற்றது. ஆனால், இன்று நடைபெற்ற தி.மு.க. செயற்குழுவில் எளிமையான சைவம் போடப்பட்டுள்ளது. அதோடு உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சிக்குத் தடை போட்டிருப்பதும் தி.மு.க.வினரையே கொதிக்க வைத்திருக்கிறது.

இன்று நடைபெற்ற தி.மு.க. செயற்குழுவில் பேசிய நிர்வாகி ஒருவர், ’’அதிமுக ஆட்சியில் எந்த திமுககாரனும் அமைச்சர்களிடம் போய் நிற்பதில்லை. ஆனால் இப்பொழுது வெட்கம், மானம் எதுவுமில்லாமல் திமுக அமைச்சர்களிடம் வந்து டெண்டர், டிரான்ஸ்பர் என்று அதிமுகவினர் பணிகளை முடித்துக் கொள்கிறார்கள்…’’ என்று ஆவேசம் காட்டினார். இதற்கு முதல்வர் உள்ளிட்ட யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த செயற்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1. அண்ணல் அம்பேத்கரை அவதூறு செய்து – அவரது தியாகத்தை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக செயற்குழு கண்டனம்.

2. ஃபெஞ்சல் புயலில் முன்கள வீரராக நின்று மக்களைக் காப்பாற்றிய கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டு.  

3. ஒன்றிய அரசே!   ஃபெஞ்சல் புயல் பேரிடர் நிதியை தமிழ்நாட்டிற்கு உடனடியாக வழங்கிடுக!

4. ஜனநாயகத்தையும் – “நேர்மையான, சுதந்திரமான” தேர்தலையும் தகர்க்க நினைக்கும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிடுக!

5. டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அதிமுகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் அப்படியொரு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி டங்ஸ்டன் கனிம ஏலம்விட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும் போடும் கபட நாடகத்திற்கு செயற்குழு கண்டனம்!

6. கல்வித்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் திட்டமிட்டு வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறைக்கு கடும்கண்டனம்.

7. “குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதில் சாதி பாகுபாடற்ற“கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்துள்ள திராவிட மாடல் அரசுக்குபாராட்டும் – வாழ்த்தும்!

8. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதி சமத்துவத்தைக் குறளாகத் தந்த அய்யன்திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினை பெருமிதத்துடன்கொண்டாடுவோம்.

9. தமிழர் பண்பாட்டுத் திருநாளாக பொங்கல் நன்னாளை தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும்கொண்டாடுவோம்.

10. “அமைந்ததோர் திராவிட மாடல் நல்லாட்சி – அணிவகுக்கும்  மக்கள் நலத் திட்டங்களேஅதற்கு சாட்சி” என தி.மு.க செயற்குழு பெருமிதம்!

11. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 மட்டுமல்ல – 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற இன்றே புறப்படுவீர்.

12. இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களையும் – சிறை பிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனே விடுதலை செய்திடுக என்பது போன்ற 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் சைவ உணவு பரிமாறப்பட்டது. கலைஞர் அரங்கில் நிறைய திருமணங்கள் நடப்பதால், அங்கு அசைவம் பரிமாறுவது இல்லை என்று காரணம் செல்லப்படுகிறது. அசைவம் சாப்பிடுவதற்கும் திருமணம் செய்வதற்கும் என்ன சம்பந்தம், இது என்ன முட்டாள்தனம் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை.

அதேபோல், உதயநிதி திறந்துவைத்த உணவுத் திருவிழாவும் சர்ச்சையாகியுள்ளது. பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்தும் வகையில் இங்கு மாட்டுக்கறி, பன்றிக்கறி போன்றவை இடம் பெறவில்லை. உணவு பரிமாறுவதில் தீண்டாமை இருக்கிறதா ஸ்டாலின் என்று தி.மு.க.வினரே கொந்தளிக்கிறார்கள்.

Leave a Comment