• Home
  • அழகு
  • கருப்பு அழகிகள் கனிவான கவனத்திற்கு..

கருப்பு அழகிகள் கனிவான கவனத்திற்கு..

Image

அழகுக் குறிப்புகள்

நிறம் என்பது இயற்கையில் கிடைப்பது. இதனை யாராலும் மாற்ற முடியாது என்பதுதான் அறிவியல் உண்மை. ஆனால், கருப்பு நிறப் பெண்களின் கைப்பையை சோதித்துப் பார்த்தால், நிச்சயம் சிவப்பழகு க்ரீம் ஒளிந்துகிடப்பதைக் காணவே முடியும்.

நிறத்தை மாற்றுவது சாத்தியம் இல்லை என்ற உண்மையை முதலில் கருப்புப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது சாத்தியம் என்றால், ஆப்பிரிக்காவில் எல்லா பெண்களும் வெள்ளையாகத்தான் இருப்பார்கள். அதனால், நம் நிறத்தை எப்படி அழகாக, ஆரோக்கியமாக தக்க வைத்துக் கொள்வது என்பதில் மட்டுமே,  கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை, அப்படியே ஏற்பது தான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது, நடத்துவது முட்டாள்தனம். கருப்பு என்பது, ஒரு நிறமே. அதை வெளுப்பாக்குகிறேன் பேர்வழி என்று கூறிக் கொண்டு, இயல்பாக இருக்கும் இயற்கை அழகைக் கெடுக்கும் விதத்தில் தங்கள் தோற்றத்திற்கும், உருவத்திற்கும் பொருந்தாத விதத்தில், கருப்பான பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதும் சரியில்லை.
அழகின் நிறம் சிவப்பு தான் என்று, எந்த விஞ்ஞானமும் சொன்னதில்லை. ஆனால், ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று, பல விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம், நம் தோலின் நிறத்தை நிர்ணயிப்பது தோலில் இருக்கும், ‘மெலனின்’ என்ற நிறமிகள் தான். இது அதிகமாக சுரந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும், தோலின் நிறம் அமையும்.தோலின் கீழ் அடுக்கில் உள்ள, ‘மெலனோஸைட்’ என்னும் வகையைச் சார்ந்த செல்கள் தான் மெலனினை உற்பத்தி செய்கின்றன. இது தான் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் தோலுக்குள் ஊடுருவும் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மெலனின் உற்பத்தி குறைவானவர்களுக்கு, தோல் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
ரொம்பவும் வெளுப்பாக தோல் உள்ளவர்களுக்கு, மெலனின் உற்பத்தி குறைந்து புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் உண்டு. கருப்பு தோல், இயற்கையிலேயே கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. இந்தியாவில் மட்டும் தான், இந்த கருப்பு நிறம், ஒரு பெரிய பிரச்னையாகப் பேசப்படுகிறது.

சாதாரண பிளேடு விளம்பரத்திலிருந்து நகை, உடை என எந்த விளம்பரமானாலும், வெள்ளையான பெண்கள்தான் ஜெயிப்பதாக காட்டப்படுகிறது.  கருப்பு நிறப் பெண்கள், வெள்ளை ஆனவுடன், முதல் ஆளாக வெற்றிக்கொடி பறக்க விடுவதாக விளம்பரங்களைப் பார்த்துப்பார்த்து, கருப்பு மீது வெறுப்பு வளர்க்காதீங்கள்.

 வியாபாரத்திற்காக எங்களின் தயாரிப்பை பயன்படுத்தினால், நாயகிகள் வெளுப்பாகி விட முடியும். மறுநாளே உலக அரங்கில் வலம் வர ஆரம்பித்து விடுவீர்கள் என்று விளம்பரங்கள் பார்க்க நேரிட்டால் சிரித்து விட்டு கடந்து போய்விடுங்கள். அந்த தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்த உடனேயே ஒரு பலனும் கிட்டாது. ஆனால் ஒவ்வாமை ஏற்படுத்தி விடக் கூடும். மெலனின் உற்பத்தியைக் குறைக்கும் அல்லது நிறுத்தி விடும்.
இதுபோன்ற விளம்பரங்களை நம்புவதற்கு பதில் நம் நிறம் இதுதான், இதை
எப்படி மேம்படுத்திக் கொள்வது, மேலும் அதிகமாகாமல் காப்பது எப்படி என, புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுங்கள்.
கருப்பாக உள்ளவர்கள் சிம்பிளாக மேக்கப்  செய்தால் போதும், அழகாகவும், மிடுக்காகவும் தெரிவீர்கள். உலக  அழகி கிளியோபட்ரா நிறமும் கருப்புதான், ஆனால் அவர்கள் அழகாகவும், பார்க்க  கவர்ச்சியாகவும் நம்மை ஈர்ப்பார். அதற்கான சிம்பிள் குறிப்புகள் இதோ.

  • உங்கள் சருமத்தை நீங்கள் ஈரப்பதத்துடன்  வைத்திருத்தல் அவசியம். நீங்கள் வெயிற் காலங்களில் வெளியில்  செல்லும் போது சூரியனின் புற ஊதா கதிர்கள் உங்களை தாக்காமல் இருக்க சன்ஸ்க்ரீன்  போட்டு கொள்வது நன்மையே. உங்கள் முகத்தை  ஈரப்பதத்துடன் வைத்து கொள்வது நல்லதே. அடிக்கடி  முகம் கழுவினீர்கள் என்றால், முகத்தில் உள்ள தூசு, அழுக்கு  போன்றவை நீங்கி விடும்.
  • காஜல் எனக் கூறப்படும் கண்மை, வெள்ளையாக  இருப்பவர்களை விட, கறுப்பாக இருப்பவர்களுக்கு  எடுப்பாக இருக்கும். ஐ-லைனர்  மற்றும் காஜல் போன்றவற்றை  நீங்கள் உபயோகிப்பீர்கள் என்றால்  உங்கள் கண்கள் அழகாக, கவர்ச்சிகரமாக இருக்கும். கண்மை  மட்டுமே  போட்டாலும்  போதுமானது. காரணம்  உங்கள் கண்களுக்கு இது வசீகரமாக  இருக்கும். சிம்பிளாக இருந்தாலும்  நீங்கள் அழகாக காட்சியளிப்பேர்கள்.
  • கருப்பாக  இருப்பவர்கள்  லிப்ஸ்டிக் அப்ளை  செய்தால், இன்னும் மிடுக்காக தெரிவார்கள். மேட் ஃபினிஷிங் எனக் கூறப்படும் லிப்ஸ்டிக் உங்களுக்கு பொருத்தமாக  இருக்கும். சிவப்பு, மெருன் போன்ற  வண்ண லிப்ஸ்டிக்குகளை கருப்பாக இருக்கும்  பெண்கள் போட்டால் அவர்களை இன்னும் அழகாக காண்பிக்கும்.

உடல் அமைப்பு, நிறம் மற்றும் நேரத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப உடைகள், அணிகலன்கள் மற்றும் அழகுப் பூச்சுகளை பயன்படுத்துங்கள். நீங்களும் பேரழகிதான்.

Leave a Comment