சென்னையில் முதன் முதலாக ஆயுஷ் அறிமுகம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 121

நம் இந்தியாவில் ஆயுஷ் மருத்துவத்திற்கு தனி மதிப்பும் மரியாதையும் கிடைக்கச் செய்தவர் நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் 2014ம் ஆண்டு ஆயுஷ் அமைச்சகத்தை புதிதாக உருவாக்கி சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை யோகா மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியா முழுக்க ஆயுஷ் மருந்தகங்கள் திறந்து வைத்தார்.

அது மட்டுமின்றி இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்கு வெளிநாட்டினர் வருகை தருவதற்கு ஆயுஷ் விசா வழங்குவதற்கும் ஆயுஷ் மருத்துவத்தில் முதலீடு செய்வதற்கும் பிரதமர் நரேந்திரமோடி வழிவகை செய்திருக்கிறார்.

உலகத்தையே கொடூரமாக புரட்டிப் போட்ட கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் நமது பாரம்பரிய மருத்துவம் சிறப்பாக செயல்பட்டது. அதனாலே, நம் நாட்டின் ஆயுஷ் மருந்துகளுக்கு உலகம் முழுக்கவே மிகப்பெரும் சந்தை தற்போது உருவாகியிருக்கிறது.

ஆயுஷ் மருந்தகம் பற்றி இங்கு விலாவாரியாகச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. பிரதமர் மோடி இந்திய அளவில் ஆயுஷ் மருத்துவத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே, சென்னை மாநகராட்சியில் ஆயுஷ் மருத்துவத்தை சைதை துரைசாமி கொண்டு வந்துவிட்டார்.

டெங்கு நோய்க்கு மருந்து இல்லை என்று ஆங்கில மருத்துவம் கைவிட்ட நேரத்தில், சித்த வைத்தியம் மூலம் நிலவேம்புக் கஷாயத்தையும் பப்பாளி இலைச்சாறையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி, நோய் அபாயத்தில் இருந்து மேயர் சைதை துரைசாமி காப்பாற்றி இருந்தார். மக்களுக்கு சித்த வைத்தியத்தின் மீது நம்பிக்கை பெருகிய நேரத்தில், நம் பாரம்பரிய மருத்துவ முறையை மீண்டும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment