ஆபத்தான குப்பை குறித்து விழிப்புணர்வு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 321

கண்ணாடி, ஊசிகள், பாட்டில்கள், துருப்பிடித்த இரும்பு போன்ற ஆபத்தான பொருட்களை எல்லாம் அப்படியே குப்பையில் கலந்து போடுவதன் காரணமாக துப்புரவுப் பணியாளர்கள் சிக்கலுக்கு உள்ளாவதை அறிந்த மேயர் சைதை துரைசாமி, இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு தீவிரமான விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்தார்.

மக்களின் அசட்டை காரணமாக கையுறையைத் தாண்டி கூரான பொருட்கள் துப்புரவுப் பணியாளர்கள் கையில், காலில் குத்தி காயத்தை உருவாக்கின. இதனால் வலி, வேதனை, மருத்துவ சிகிச்சை, விடுப்பு போன்ற எக்கச்சக்க பிரச்னைகள் உருவாகின்றன. எனவே, மக்கும் குப்பை, மக்காத குப்பை, ஆபத்தான பொருட்கள் ஆகியவற்றைத் தனியே பிரித்துத் தரும் வகையில் மக்களை மாற்ற விரும்பினார்.

குப்​பையி​லிருந்து உரம் தயாரிக்​கும் மையங்​கள், குப்பையில் இருந்து எரிவாயு தயாரிக்​கும் மையங்​கள், குப்பையில் இருந்து மின்​சாரம் தயாரிக்​கும் மையங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றாலும் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஏனென்றால், குப்பைகளை தரம் பிரிப்பது மிகவும் சவாலான பணியாக இருந்ததுடன் அதிக செலவு, நேரம் பிடிப்பதாகவும் இருந்தன. இதையும் துப்புரவுப் பணியாளர்களே செய்ய வேண்டிய நிலைமை இருந்ததால், அவர்களால் தெருக்களில் குப்பையை சேகரிப்பதற்கு முழு நேரமும் உழைக்க முடியாத நிலையும் இருந்தது.

எனவே, மக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை, ஆபத்தான குப்பை போன்றவை குறித்து தெளிவாக விளக்கும் வகையில் பிரசுரங்கள், போஸ்டர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இதனை பள்ளி மாணவர்களிடம் இருந்து கொண்டுசெல்வது நல்லது என்று நினைத்தார். நேரடியாக பெரியவர்களிடம் சொல்வதை விட, மாணவர்கள் மூலம் பெரியவர்களுக்குச் சென்று சேர்வது மிகவும் எளிதாக புரியும் என்று அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து பாடம் எடுக்கும் பணியில் இறங்கினார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment