ரசிச்சுப் படிங்க
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024ல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
முதல் பரிசாக ரூபாய் 25000, இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000, மூன்றாவது பரிசாக ரூபாய் பத்தாயிரம், பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் 50 கவிதைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் என ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 53 கவிதைகளையும் தொகுத்து நூலாகவும் வெளியிடப்பட்டது. நூலை இயக்குனர் மிஷ்கின் வெளியிட பேராசிரியை பர்வீன் சுல்தானா பெற்றுக்கொண்டார்.
முதல் பரிசு கவிதையாக அம்சப்ரியா எழுதிய கவிதையும், இரண்டாவது பரிசு ஸ்ரீதர் பாரதி எழுதிய கவிதையும் மூன்றாவது பரிசுக்குரியதாக காஞ்சி பாக்கியா எழுதிய கவிதையும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதோ அந்த கவிதைகள்.
முதல் பரிசு
தன் நிழலை
காடென நினைத்து
மெல்ல அசையும் கோவில் யானை
இரண்டாம் பரிசு
பார்வையற்றவனின்
புல்லாங்குழலில்
ஒன்பது கண்கள்
மூன்றாம் பரிசு
நீந்தியபடியே கீழிறங்குகிறது
பனிக்கட்டியின் மேல் விழுந்த
ஒற்றை எறும்பு