தமிழ் பேசினால் விருது

Image

நீங்களும் பேசுங்க, பேசிப் பாருங்க

தமிழக அரசின் கீழ் வரும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படுவது, சிறந்த முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. ஊடகங்களில் தமிழ்ச் செய்திகளைத் தவறில்லாமலும், அழகாகவும், சரியாகவும், உச்சரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கான “சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது” வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களை தங்களைப் பற்றிய குறிப்புகளுடன் (பெயர், பதவி, மற்றும் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர்) பின் வரும் நாப்பிறழ் தொடர்களை வாசித்து அதனை வீடியோவாகப் பதிவிட்டு 24.07.2024 புதன்கிழமை மாலை 06.00 மணிக்குள், 9498042410 என்ற WhatsApp செயலி எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாப்பிறழ் பயிற்சித் தொடர்கள்:

அரியை அறியாதவன் அரனை அரணை என்பானோ?.

அருவை, அறுக்க ஆராலும் இயலுமோ?.

அக்கரையில் அக்கறையின்மையால் அருகு அறுகியதை அரிவை அறிவாளோ?.

அன்னன் ஆணம் ஆவானோ? ஆனம் ஆவானோ?.

ஆணியால் எழுதலாம், ஆனை, அனை ஆகுமோ?.

உழுந்தென்பது பயிர், உளுந்தென்பது கழை.

ஊன் ஊணாகும் உன்னையும் உன்னலாம் என்பது காதலின் நிலையாம்.

காடெல்லாம் கனி இருக்கும், கணிப்பதெல்லாம் கனியாகுமோ?.

கன்னனின் கணை கனைத்தால் இந்திரன் மகன் என்னாவான்?.

கான் நிறைந்த காணம். காணலாமோ?. கானலாமோ?.

கின்னம் கேணமானால் கோனும் கேனியாவான். சேணம் சேனமாகா, பன்னோசை பண்ணாகாது எனவறிக

அட, பரிசெல்லாம் வேண்டாம் என்பவர்களும் இவற்றை திரும்பத் திரும்பச் சொல்லிப் பாருங்கள். தமிழ் இனி மெல்ல வளரும்.

Leave a Comment