• Home
  • சட்டம்
  • வாரிசுகளுக்கு எந்த தருணங்களில் சொத்து கிடைக்காது..?

வாரிசுகளுக்கு எந்த தருணங்களில் சொத்து கிடைக்காது..?

Image

வழக்கறிஞர் நிலா பதிலளிக்கிறார்

தாத்தா சொத்து பேரனுக்கு, அப்பா சொத்து பிள்ளைக்கு என்றெல்லாம் நம்பிக்கை வைக்கலாம். ஆனால், ஒருசில வித்தியாசமான சூழலில் சட்டரீதியாக வாரிசுகளுக்கு சொத்துரிமை கிடைக்காமல் போகலாம் என்கிறார் வழக்கறிஞர் நிலா.

இது குறித்து நிலா, ‘’வாரிசுகளுக்கு நிச்சயம் சொத்து கொடுக்கப்படும் என்று கூற இயலாது. இந்தியாவிலுள்ள உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் முக்கியமாக இந்திய பரம்பரைச் சட்டம், இந்திய மரபுவழிச் சட்டப்படி வாரிசுகளுக்கு சொத்து கிடைக்காத நிலைகள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.

  • சொத்து வைத்திருப்பவர் தன்னுடைய சொத்துக்களை வேறு ஒருவருக்கு என்று மனப்பூர்வமாக எழுதி சட்டப்பூர்வமாகப் பதிவு செய்துவிட்டால், அந்த சொத்தில் வாரிசுகள் உரிமை கோர முடியாது.
  • சொத்தை ஒருவர் வாழ்நிலையில் gift deed மூலம் வேறு ஒருவருக்கு பரிசளித்திருந்தால், வாரிசுகளுக்கு உரிமை ஏற்படாது.
  • வாரிசு ஒருவர் எழுத்து மூலம் உரிமையை விட்டுவிட்டதாக (relinquishment deed) சட்டப்பூர்வமாக அறிவித்து இருந்தால், அவருக்கு சொத்திலிருந்து உரிமை கிடையாது.
  • சில சமயங்களில், திருமணமாகி விட்ட பெண் சொத்துக்கு உரிமையைக் கோர மறுத்து எழுத்து ஆவணத்தில் கையெழுத்து வைத்திருந்தால், பின்னர் உரிமை கோர முடியாது.
  • வாரிசு ஒருவர் சொத்து வைத்திருந்தவரை கொலை செய்திருந்தால் அல்லது சொத்துக்காக தவறான வழியில் சூழ்ச்சி செய்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் சொத்து கிடைக்காது.
  • சில சமயங்களில், திருமணத்திற்கு வெளியே பிறந்த பிள்ளைக்கு முழு உரிமை கிடைக்காது.

தந்தை அல்லது தாய் சுய சம்பாத்திய சொத்தை தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி விடலாம். எனவே வாரிசுகளுக்கு மட்டுமே சொத்து கிடைக்கும் என்பது உறுதி இல்லை.

YouTube player

Leave a Comment