• Home
  • மனம்
  • சின்ன விஷயங்களுக்கும் பெரிய கோபமா..?

சின்ன விஷயங்களுக்கும் பெரிய கோபமா..?

Image

மன அழுத்தம் ஆலோசனைகள்



மன அழுத்தம் ஏற்பட்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உடலில் சோர்வு மற்றும் பரபர நிலை ஏற்படும். படபடப்பு, நடுக்கம் இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாது. தன்னைப் பற்றி உயர்வாக எண்ண முடியாது. இன்னும் சிலர் சாவதற்குக்கூட துணிந்துவிடுவார்கள். தவிர, மன அழுத்தம் அதிகமாவதால் குடும்பத்தில் பிரச்சினகள் வரலாம். கணவன் மனைவிக்குள் மிகையான கோபம் வரலாம். சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட கோபம் வரலாம்.

 சிறுகோபம் பெரிய சண்டையாக மாறலாம். அப்போது குழந்தைகளைத் தாக்குவது, மனிதர்களைத் தாக்குவது அல்லது மற்ற உயிரினங்களைத் தாக்குவது கூடாது. அதற்குப் பதில் நம் மனதை வேறுவகையில் செலுத்த வேண்டும். அதாவது, கோபம் வரும் நேரத்தில், யாராவது ஒரு நபர் அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தள்ளிச் செல்லலாம். வெளியில் சென்று வரும்போது சற்று, கோபம் குறைய வாய்ப்பிருக்கிறது அல்லது கோபத்தைக் குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர், தலையிட்டு சமாதானப்படுத்தலாம் அல்லது நண்பர்களிடம் உரையாடலாம். தவிர, இசை கேட்கலாம்; புத்தகம் படிக்கலாம்; தியானம் – யோகா – மூச்சுப்பயிற்சி செய்யலாம்.

மன அழுத்தத்திற்கு முக்கியக் காரணம் தூக்கம் என்பதால், அதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தூக்கம் சரியாக இல்லை எனில், உடல் பிரச்சினகள்கூட வரலம். ஆகையால், அவர்கள் சரியான நேரத்துக்கு படுக்க வேண்டும். சரியான நேரத்துக்கு எழ வேண்டும். தூக்கப் பிரச்னை உள்ளவர்கள் பகலில் தூங்கக் கூடாது. மேலும், மன அழுத்தம் உள்ளவர்கள் ஒருநாளைக்கு ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுபோல் மாலையிலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மாலை 7 மணிக்குமேல் டீ, காபி குடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். படுத்தபிறகு கைப்பேசி, லேப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. இரவில் கைப்பேசியைப் பயன்படுத்துவதால், அது கண்ணுக்குப் பிரச்னையை தரும். இதற்குமேலும் பிரச்னைகள் இருந்தால் மன நல மருத்துவரைப்பார்ப்பது நல்லது.

முக்கியமாய், பொறுமையுடன் செயல்பட வேண்டும். அனைத்தையும் நம்பாமல் சரியான செய்திகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இரண்டு மூன்று தடவையாவது நாட்டில் நடக்கும் செய்திகளை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். தவறான, இறப்பு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்தால் அதனால் பயம் அதிகரிக்கும். மொத்ததில் இதயத்தைப் பாதிக்காத படம், செய்திகளைப் பார்ப்பதும், கேட்பதும் நல்லது.

சரியான அளவில் சத்தான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், எந்த நேரமும் கொரோனா பற்றிய அச்சம் தேவையில்லை. எதையும் எளிதாக அதாவது டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் மனநிலை வாய்த்துவிட்டால், எத்தகைய மன அழுத்தத்தையும் வெல்லலாம்” என்றார், நம்பிக்கையுடன்.

Leave a Comment