நாடார், கவுண்டர், பிராமணர்ன்னா பயமா..?

Image

முக்குலத்தோர் திருச்சி சூர்யா, அண்ணாமலை மீது பாய்ச்சல்

தமிழகத்தில் பா.ஜ.க.வின் 40க்கு 40 தேர்தல் தோல்விக்குப் பிறகு அண்ணாமலை ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். அவரது ஆதரவாளரான திருச்சி சூர்யாவைக் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு பலவீனமாகி விட்டார்.

இந்த நிலையில் தன்னை பதவியில் இருந்து நீக்கிய அண்ணாமலைக்கு சில கேள்விகளைக் கேட்டு சமூகவலைதளங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார் திருச்சி சூர்யா.

இன்று அவர், ‘’பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராம அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன்.

இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?

தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?

தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய SVe.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை?

பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா? எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது’’ என்று தன் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்.

திருச்சி சூர்யா வெளியேற்றப்பட்டதும் முக்குலத்தோர் சார்பில் அண்ணாமலைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ஏற்கெனவே பரபரப்பு கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில் சூர்யா பற்ற வைத்த நெருப்பு பற்றி எரிகிறது.

Leave a Comment