• Home
  • சர்ச்சை
  • அரசு பள்ளி ஆசிரியர்கள் உழைக்காமல் ஏமாற்றுகிறார்களா..?

அரசு பள்ளி ஆசிரியர்கள் உழைக்காமல் ஏமாற்றுகிறார்களா..?

Image

மாற்றத்துக்குத் தேவை இது தான்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்கள் வாக்கு தி.மு.க. கூட்டணிக்கு குறைந்ததில் இருந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வருகின்றன. இதுவே, இப்போது சமூகவலைதளத்தில் பெரும் மோதலாக நடந்து வருகிறது.

அரசு ஆசிரியர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், ‘’தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் போல சொகுசு யாருக்கும் கிடைக்காது. எல்லா அரசு விடுமுறை நாட்களும் விடுமுறை, கூடுதலாக அரையாண்டு கோடைகால விடுமுறை. மழை பெய்தால் வரத் தேவையில்லை. சம்பளம் சமுதாயத்தில் கௌரவமாக ஏன் அப்பர் மிடில் கிளாஸ் ஆக வாழக்கூடிய அளவிற்கு. அப்படி இருந்தும் உழைக்க தயங்குகிறார்கள்.

நியாயமாக சிறப்பாக உழைக்கக்கூடிய ஆசிரியர்கள் அதில் 10% தான் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் ஆசிரியர்கள் கூட சொல்லட்டும். ஒரு அரசு பள்ளியில் எல்லோருமே முழுமனதாக வேலை பார்க்கிறார்களா என்று? எத்தனை சதவிகிதம் ஓப்பியடிக்காமல் வேலை பார்க்கிறார்கள் என்று? நான் சந்தித்த பல சீட்டு போடுபவர்கள், ரியல் எஸ்டேட், சிறிய பைனான்ஸ் (நாள் வட்டிக்கு கொடுப்பவர்கள்) FMGC ஏஜென்சி எடுத்திருப்பவர்கள் என குறிப்பிட்ட சதவிகிதம் அரசு ஆசிரியர்கள் தான்…’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுப்பவர்கள், ’10 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக பணியாற்றி இருந்தால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இந்திய அளவில் எப்படி முதன்மையானதாக இருக்கும்.எல்லா துறைகளில் 10 சதவீத ஏமாற்றுக்காரர்கள் இருப்பது போல் கல்வித்துறையிலும் இருக்கலாம்.. துறை சார்ந்த நபராக இல்லாத நீங்கள் கடைத்தெருவில் அமர்ந்து பார்க்கும் போது அந்த 10 சதவீத ரியல் எஸ்டேட்,வட்டி கொடுத்து வாங்கும் ஆசிரியர்கள் மட்டுமே உங்கள் கண்களுக்குத்தெரியலாம்…’’ என்று சண்டை போடுகிறார்கள்.

இவர்களுக்கு இடையில், அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி பற்றி புரிதல் முக்கியம்’ என்கிறார் மருத்துவர் புருனோ. அவரது பதிவில், ’’அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் தரத்தை விட குறைவாக இருக்கிறதா என்றால் பதில் ஆம் என்பது தான். ஏனென்றால் தனியார் பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கும் தொகையை விட அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கும் தொகை குறைவு அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கப்படும் தொகை எவ்வள்வு வருடத்திற்கு 1300.

மாதத்திற்கு 110 ரூபாய் இந்த பணத்தில் அரசு கல்வி மட்டும் வழங்கவில்லை சத்துணவு முட்டை புத்தகங்கள் சீருடை பாடப்புத்தகப்பை அட்லஸ் டிக்சினரி மிதிவண்டி பஸ்பாஸ் சானிடரி நாப்கின் லேப்டாப் என்று அனைத்தும் இந்த 1300குள் அடக்கம்

இந்த அளவு குறைந்த செலவில் எந்த தனியாராவது பள்ளி நடத்த முடியுமா கண்டிப்பாக முடியாது பிறகு அரசால் எப்படி முடிகிறது அரசு ஆசிரியர்களின் கடின உழைப்பு தான் அரசு ஆசிரியர்கள் தான் அங்கு ஆசிரியர், ஸ்டோர் கீப்பர், மேலும் ஒரே ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்ட வகுப்புகள் எடுக்க வேண்டும்

ஏனென்றால் அரசு நிதி குறைவு தனியார் பள்ளி போல் ஆசிரியர்கள் ஒரு வகுப்பிற்கு போதிக்கும் பணி மட்டும் செய்வதாக மாற்ற முடியாது முடியும் அதற்கு நிறைய ஆசிரியர்கள், நிறைய ஊழியர்கள் வேண்டும் அதாவது இன்று ஒதுக்கப்புடும் 1300ஐ விட அதிகம் ஒதுக்க வேண்டும் அதற்கு நிதி இல்லை

ஆசிரியர்களின் சம்பளத்திற்கே நிதி சென்றால் மீதி எங்கு நிதி கிடைக்கும் ஐயா ஆசிரியர்களின் சம்பளமே இந்த 1300ல் இருந்து தான் வழங்கப்படுகிறது அரசு பள்ளிகள் தனியார் பள்ளி போல் மாற என்ன செய்ய வேண்டும் அதிக நிதி வேண்டும் ஆசிரியர்கள் அதிகம் வேலை பார்த்தால் முடியுமா முடியாது

ஏற்கனவே ஆசிரியர்கள் அதிக வேலை தான் பார்க்கிறார்கள் இதற்கு மேலும் அவர்களால் பார்க்க முடியாது ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள் என்கிறீர்கள் ஆனால் தனியார் பள்ளி அளவு தேர்ச்சி இல்லையே காரணம் – அரசு பள்ளி, தனியார் பள்ளி நிதி ஒதுக்கீடு தானே தவிர ஆசிரியர்கள் குறைவாக வேலை செய்வது அல்ல

அரசு பள்ளி – ரிக்‌ஷா என்றால் தனியார் பள்ளி – ஆட்டோ. ரிக்‌ஷாவை விட ஆட்டோ சீக்கிரம் செல்கிறது அதற்கு காரனம் ஆட்டோ ஓட்டுபவரின் திறமை என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அதே போன்ற முட்டாள் தனம் தான் அரசு ஆசிரியர்கள் திறமை குறைவு, அல்லது வேலை குறைவாக செய்வதால் தான் அரசு பள்ளிகள் தனியார் பள்ளி அளவு தேர்ச்சி இல்லை என்று கூறுவது.

ரிக்‌ஷா ஓட்டுபவரின் ரிக்‌ஷாவில் அவரது பையன் ஏறினால் அந்த ரிக்‌ஷா ஆட்டோவை விட வேகமாக செல்லும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அதே போன்ற முட்டாள் தனம் தான் அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு பள்ளிகளின் தரம் உயரும் என்று கூறுவது.

அரசு பள்ளி  அம்மா கேண்டீன் என்றால் தனியார் பள்ளி ஐந்து நட்சத்திர ஹோட்டல். அதாவது அம்மா கேண்டினில் வேலை செய்ப்வர்களின் குடும்பம் அம்மா கேண்டினில் சாப்பிட்டால் அம்மா கேண்டின் தாஜ் ஹோட்டல் ஆகிவிடும் என்றூ கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ, அதே போன்ற முட்டாள் தனம் தான் அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு பள்ளிகளின் தரம் உயரும் என்று கூறுவது’’ என்கிறார்.

நியாயமான வாதம்.

Leave a Comment