கூவம் நதிக்கரை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 372

மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதற்குத் திட்டமிட்ட நேரத்தில், கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்த சர்வீஸ் ரோட்டில் குடிசை போட்டு வசித்தும், மீன் வியாபாரம் செய்துகொண்டும் இருந்த மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு காங்கிரீட் வீடு கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி. அந்த அனுபவத்தின் மூலம் கூவம் நதிக்கரையில் வசிக்கும் மக்களையும் அகற்றி, அவர்களுக்குப் புது வாழ்க்கை தர முடியும் என்று முடிவு எடுத்தார்.   

இதன் அடிப்படையில் கூவம் நதிக்கரையில் வசிக்கும் மக்களுக்கு உரிய மாற்று இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மேயர் சைதை துரைசாமி எடுத்துக்கொண்ட முயற்சிகளை அத்தனை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பாராட்டினார்கள். அனைத்து மக்களுக்கும் தமிழ் நாடு குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டன.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் குடிசைப் பகுதி மக்கள் குடும்பத்துடன் வசிப்பதற்கு அடுக்குமாடி குடீயிருப்பு கட்டும் பணி ஒப்படைக்கப்பட்டது. நதியின் கரையில் குடிசையில் வாழும் மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று  வாரிய குடியிருப்புகளில் வீடுகள் உறுதி செய்யப்பட்டன.

அது மட்டுமின்றி, இந்த குடிசைப் பகுதி குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு மேயர் சைதை துரைசாமி உறுதியளித்தார். கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் குழந்தைகளின் கல்வி, ஆண், பெண்களின் வேலை பாதுகாப்பு ஆகியவைகளுக்கு உத்திரவாதம் கொடுக்கும் வகையில் குடியமர்வு இருக்க வேண்டும் என்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கூவம் நதிக்கரையில் வசிக்கும் மக்கள் அடிக்கடி நோய்க்கு ஆட்படுவது மட்டுமின்றி எவ்வித அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் வாழ்க்கை நடத்தி வந்தனர்.  இந்த மக்கள் அனைவருக்கும் மறுவாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதி காட்டினார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment