• Home
  • அரசியல்
  • தமிழிசையை மீண்டும் ரவுண்டு கட்டும் அண்ணாமலை வார் ரூம்

தமிழிசையை மீண்டும் ரவுண்டு கட்டும் அண்ணாமலை வார் ரூம்

Image

அரசியலுக்கு முழுக்கு போடுவாரா..?

லண்டனுக்குச் செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து அதிரடி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார் அண்ணாமலை. அதற்கு தமிழிசை செளந்தரராஜன், ‘எதிர்க் கட்சித் தலைவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். கடும் சொற்கள் கூடாது’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசினார்.

ஏற்கெனவே அண்ணாமலை வார் ரூமுக்கு எதிராகப் பேசி அமித் ஷாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட அனுபவம் இருந்தாலும் எடப்படிக்கு விசுவாசமாக இருக்கிறார் என்று என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் மீண்டும் கொதித்து எழுந்திருக்கிறார்கள். லண்டனில் இருந்தே அண்னாமலை இவர்களை இயக்குவதாக சொல்லப்படுகிறது.

அண்ணாமலையின் வார் ரூம் ஆட்கள், ‘’எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காகவும் சித்தாந்தத்திற்காகவும் பாஜகவை ஆதரித்து நிறைய எதிரிகளை சம்பாதித்து சிறைக்கு எல்லாம் செல்லும் பாஜக ஆதரவாளர்களை குறை சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருது? திமுக வந்த பிறகு அதிகம் கைது செய்யப்பட்டது ஆதரவாளர்கள் மற்றும் அடிப்படைத் தொண்டர்கள் தான் வெட்டி வியாக்கியானம் சில சுயநலம் பிடித்த பேசும் தலைவர்கள் அல்ல.

நீங்க கட்சி பொறுப்பில் பணியாற்றுகிறீர்கள் என்றால் கட்சியில் ஏதாவது முன்னேற முடியும் என்று எதிர்பார்ப்புக்காக தான் ஆனால் ஆதரவாளர்கள் அப்படி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இங்கே அவர்களின் பங்கையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நோட்டா கட்சி 3% கட்சி என்று சொல்லும் பொழுதெல்லாம் மூணின் குறுகி நின்றவன் நீங்க சொல்லும் இந்த ஆதரவாளர்கள் மற்றும் அடிப்படைத் தொண்டர்கள் தான்.’’ என்று தமிழிசையை வெளுத்து வாங்குகிறார்கள்.

தமிழிசையை கட்சியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும், அப்போது தான் மற்றவர்களுக்கும் பயம் வரும். தமிழிசைக்கு மக்களிடமும் ஆதரவு கிடையாது என்று தொடர்ந்து வெளுக்கிறார்கள்.

தனக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாமல் தனி மரமாக நிற்கிறார் தமிழிசை. கட்சி மாறுவதா அல்லது அரசியலுக்கே முழுக்கு போட்டுவிடலாமா என்ற யோசனையில் இருக்கிராராம்

பரிதாபம் தான்.

Leave a Comment