விமானநிலையத்தில் கண்ணீர் காமெடி
சென்னை விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட அண்ணாமலையை வழியனுப்புவதற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் வந்தார்கள். அவர்களுடைய டிராமா அழுகைக் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்கள் உயர் படிப்பு படிப்பதற்கு அண்ணாமலை கிளம்பிய நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் ஏராளமான பா.ஜ.க. தலைவர்கள் நேரில் வந்திருந்து வழியனுப்பி வைத்தார்கள்.
அந்த நேரத்தில் பா.ஜக.வின் முக்கிய நிர்வாகியான கரு நாகராஜன் மலர்ச் செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்த நேரத்தில் கதறி அழுதார். இதைக் கண்டு தொண்டர்கள் அத்தனை பேரும் ஆச்சர்யமானார்கள். உடனே அவரது பாணியில் அண்ணாமலைக்கு வாழ்த்து சொன்ன அனைவரும் கதறி அழத் தொடங்கினார்கள்.
என் மேல இப்படியொரு பாசமா என்று அண்ணாமலையும் அவர்களின் நடிப்பை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஆறுதல் சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த காட்சியைக் கண்ட பொதுமக்கள், ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என்று ஜனகராஜ் குஷியில் குதிப்பது போல் இருக்கிறதே இந்த நாடகம் என்று சிரிக்கிறார்கள்.
இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்க இருக்கிறதோ..?