• Home
  • அரசியல்
  • சவுக்கு சங்கருக்கு ஆதரவாக களம் இறங்கும் அ.தி.மு.க.

சவுக்கு சங்கருக்கு ஆதரவாக களம் இறங்கும் அ.தி.மு.க.

Image

கஞ்சா வழக்கு, பெண் போலீஸ் அவமதிப்பு, சொத்துக்குவிப்பு போன்ற ஏகப்பட்ட வழக்குகள் சவுக்கு சங்கர் மீது போடப்பட்டு இப்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கிறார்.

ஆரம்பத்தில் சவுக்கு சங்கருக்கு ஆதரவு கொடுத்த அரசியல் கட்சியினர் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டார்கள். நடுநிலையாளர்களும் இத்தனை சொத்துக்கள் வாங்கியிருக்கிறாரா என்று வாய் பிளந்து நிற்கிறார்கள். இத்தனை சொத்துக்கள் வாங்கியதற்குப் பின்னே அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் சிலர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சவுக்கு சங்கரை தினம் தினம் ஒரு வழக்குக்காக ஒவ்வொரு ஊருக்கும் அலைய வைக்கிறார்கள். இப்போது சவுக்கு சங்கரை தினம் தினம் பெண் போலீஸாரே அழைத்துச் செல்கிறார்கள். பெண் போலீஸார்கள் தன்னை தாக்குவதாக சவுக்கு சங்கர் புகார் கொடுத்தார்.

அதற்கு, ‘கல்யாணமாகாத என்னிடம் நம்பர் கேட்டார்’ என்று பெண் போலீஸ் பதில் கொடுத்து அலற விட்டிருக்கிறார்கள். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்று அத்தனை அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அ.தி.மு.க.வினர் மட்டும் ஆதரவு காட்டி வருகிறார்கள்.

அண்ணா தி.மு.க.வின் ஐ.டி.விங்க் மூலம் சவுக்குக்கு ஆதரவாக நிறைய செய்திகள் வெளியாகின்றன. கல்யாணசுந்தரம் வெளிப்படையாகவே, ‘ஆட்சி நடத்துறாங்களா நாடகம் நடத்துறாங்களான்னே தெரியலை. சவுக்கு வெளியே வரும்போது அவர் மீது பரிதாபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி நாடகம் நடத்துகிறார்கள்’ என்று பாய்ந்திருக்கிறார்.

அடுத்து அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களும் வருவார்களா..?