ஓஷோ சொல்வதைக் கேளுங்கள்
முதியவர்களை மட்டுமே வாட்டி வதைத்த ரத்த அழுத்தம் இப்போது கல்லூரி மாணவர்களுக்கும் இளையோருக்கும் வந்துவிட்டது. ரத்த அழுத்தத்தை சமாளிப்பதற்கு ஓஷோ சொல்லும் வழி வெகு எளிமையானது.
உனது உணர்வுகளை மறந்து சிந்தனையின் மீது மித மிஞ்சிய கவனத்தைச் செலுத்தும்போது ஏற்படக்கூடிய ஒரு மனநிலையே உயர் இரத்த அழுத்தம். அறிவின் பால் அளவுக்கதிகமாக நம்பிக்கை வைப்பதே எல்லா உயர் இரத்த அழுத்தத்தின் அடிப்படைக் காரணம்: அது சமநிலையின்மையால் வருகிறது.
சிந்தனையில் வாழ்வோருக்கு உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது. ஓய்வு இதயத்திலிருந்து தோன்றுகிறது. வீட்டிலிருந்து வெளியே வருவதும், வெளியிலிருந்து வீட்டிற்குள் செல்வதும் போல் மூளையிலிருந்து இதயத்திற்கு ஒருவன் எளிதாக வந்து செல்ல வேண்டும்.
மூளைக்கும் இதயத்திற்குமிடையே திரவத்தைப்போல் பாய்ந்து செல்ல முடிய வேண்டும். ஆற்றின் இந்த இரு கரைகளுக்கிடையே நீ இருக்கிறாய். இவற்றில் ஏதேனும் ஒரு கரையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் வாழ்வு ஏற்றத் தாழ்வு உடையதாகிவிடும்.
இதயத்திற்கு மட்டுமே ஓய்வெடுப்பது எப்படி என்பது தெரியும். ஏனெனில் இதயம் மட்டுமே நேசிப்பதுபற்றி அறிந்துள்ளது; வாழ்வை எப்படி ரசிப்பது, எவ்வாறு கொண்டாடுவது என்பதையும், பாட்டையும் நடனத்தையும் அறிந்திருப்பதும், இதயம் மட்டுமே.
மூளை நடனத்தையோ. கவிதையையோ பற்றி ஏதும் அறியாது, இவற்றை முட்டாள் தனமானது என, கண்டனம் மட்டுமே செய்யும். எப்பொழுதும் தலையை உபயோகிக்கும் சமூகம் உயர் இரத்தஅழுத்தம் உடையதாகி ஒவ்வாருவரும் நரம்புக்கோளாறு உடையவர் களாகிவிடுவர்.
அவன் செல்லுமிடமெல்லாம். அவன் மனோதத்துவ நிபுணரையும் சுமந்து கொண்டு திரியவேண்டும். ஆனால் தலையை அதிகம் உபயோகித்தால் அவருக்கும் அதே நிலையே. சமநிலையினை இழந்து விடுதலே உயர் இரத்த அழுத்த நிலையாகிறது.
உன்னால் உனது இதயத்தை இயங்கச் செய்ய முடிவதில்லை. எப்போது தர்க்கம் எல்லாமுமாகி விட்டதோ அப்போது பரபரப்பு உருவாகி, எப்போதுமே அமைதியின்றி புதுப் பிரச்சினைகளைக் கொடுக்கத் தொடங்குகிறது. மூளை சிக்கல் எதையும் தீர்த்ததில்லை, அதனால் தீர்க்கவும் முடியாது. அது அதனுடைய அதிகாரத்தில் இல்லை. அது நடிப்பதுடன் வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறது, அது. ‘நானே விமோசனம் தருவேன்’ எனக் கூறுகிறதே அன்றி ஒருபோதும் விமோசனம் தந்ததில்லை.
எனவே சிக்கல்கள் சேரத் தொடங்கிவிட, சிக்கல்களிலிருந்து விடுபடுவது எவ்வாறு என உனக்குத் தெரியாது போய்விடும். ஏனெனில் மூளையிலிருந்து வெளிவருவது எப்படி என நீ அறிய மாட்டாய். குழந்தைகளோடு விளையாடுவது எப்படி? உன் காதலியை நேசிப்பது எவ்வாறு? மரங்களுடன் உரையாடுதல் எங்ஙனம்? விண்மீன்களுடன் பேசுவது எப்படி? என்பனவெல்லாம் உனக்குத் தெரியாது. அனைத்தையும் மறந்து விட்டாய்.
ஒரு கவிஞனாக இல்லாமல் போய்விட்ட தோடு ஓர் உயிரோட்டமுள்ள இதயமே இல்லாதவனாகி விட்டாய். உயிரின் அடிப்படையாக இருப்பது இதயம்.
ஒருவன் மூளையின்றி வாழமுடியும்: ஆனால் இதயமின்றி வாழ முடியாது. மூளை கொஞ்சம் மேலோட்டமானது, ஒருவகை ஆடம்பரம் அது. ஆனால் இதயமோ மிகவும் அத்தியாவசியமானது. மூளை இருப்பது மனிதனிடம் மட்டுமே, எனவே அது ஒன்றும் அவ்வளவு அவசியமானதல்ல.
அது இல்லாமலே வாழும் மிருகங்கள் மனிதனைவிட நன்றாக, மிக அமைதியுடன், ஆனந்தமாக வாழ்கின்றன. அது போன்றே மூளையில்லாமல் மரங்களும், பறவைகளும், குழந்தைகளும், மகான்களும் வாழ்கின்றனர்.
மேலோட்டமானது மூளை. சில குறிப்பிட்ட வேலைகள் அதற்குண்டு: அதைப் பயன்படுத்திக்கொள். ஆனால் அதனால் பயன் படுத்தப்பட்டு விடாதே. ஒருமுறை அதனால் பயன்படுத்தப் பட்டுவிட்டால் நீ பரபரப்படைந்து விடுவாய்:
பரபரப்பு ஏற்பட்டால் வாழ்வு அருவருக்கத் தக்கதாகிவிடும். நீண்டகாலமாக தொல்லை தந்து வரும் ஒரு வலி அது: பசுஞ்சோலை எதையும் காணமுடியாத பாலைவனம் என்கிறார் ஓஷோ.