ஜிகே மணிக்கு எம்.பி.. செளமியாவுக்குப் பதில் ஏகே மூர்த்தி..?
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் கடந்த நிலையில், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் அன்புமணி கடுமையான வாத்தைகளால் பேசினார். வன்னியரான துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்காமல் உதயநிதி ஸ்டாலினுக்குக் கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கட்சிக்கு உழைத்த ஜி.கே.மணி, ஏகே.மூர்த்தி ஆகியோருக்கு ஏன் ராஜ்யசபா சீட்டு கொடுக்காமல் அன்புமணியே பறித்துக்கொண்டார். ஜி.கே.மணி நன்றாக உழைத்த போதும் கட்சித் தலைவர் பதவியை அன்புமணி ஏன் வாங்கினார். சவுமியா அன்புமணிக்கு பதிலாக தர்மபுரியில் கட்சிக்கு உழைத்தவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்று அன்புமணியைப் போட்டுத் தாக்குகிறார்கள்.
மேலும் 10.5 சதவீதம் குறித்துப் பேசியிருக்கும் அமைச்சர் சிவசங்கர், ‘’மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூட்டணியில் குலாவும் மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து, தனது கூட்டணி பேரத்தை வலுப்படுத்த பேரம் பேசி வரும் அய்யா ராமதாசும் அவரது தவப்புதல்வன் அன்புமணி ராமதாசும் தற்போது அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்.
ஏற்கனவே உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பிற்கு செல்லும் வன்னிய சமூக மாணவர்களின் எண்ணிக்கை 10.5% விட அதிகம். தற்போது 10.5%-ஐ அமல்படுத்துவதன் மூலம் மேற்படிப்பில் சேரும் வன்னியர் சமூக மாணவர்கள் எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்திக்கவே வாய்ப்புகள் அதிகம்.
நன்றாய் படித்து வேலைக்கு சென்று வாழ்வில் சிறந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்புள்ள இளைஞர்களை எல்லாம், பிஞ்சிலேயே சாதிவெறி பாய்ச்சி நன்றாய் செழித்து வளர வேண்டிய அந்த இளைஞர்களை வெறும் களைகளாய் மாற்றிக் கொண்டிருப்பதுதான் பாமகவின் சாதனை. மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என மோடி அரசை கேட்பீர்களா? அதை எல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அன்புமணிக்குப் பதில் சொல்ல சிவசங்கரா..? நல்லா இருக்குது தி.மு.க. அரசியல்.