என்ன செய்தார் சைதை துரைசாமி – 273
மாநகராட்சியின் நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அவற்றை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கும் வரச் செய்த மேயர் சைதை துரைசாமிக்கு நிறைய பாராட்டு கிடைத்தது. மாநகராட்சி நில அபகரிப்பை தடுத்து நிறுத்தியதுடன் மேயர் சைதை துரைசாமியின் பணி நிற்கவில்லை.
குத்தகை என்ற பெயரில் அரசு சொத்தை காலம் காலமாக பலரும் கொள்ளை அடித்து வரும் அவலம் மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. இந்த தில்லுமுல்லு நீண்ட காலமாகவே நடைபெற்று வருவதையும் இதை தடுப்பதற்கு யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. ஒரு தவறு நடக்கிறது என்பது தெரியவந்தால், அதனை தடுத்து நிறுத்துவதும் மீண்டும் அப்படியொரு தவறு நிகழாமல் தடுப்பதும் மேயர் சைதை துரைசாமியின் பாணி.
ஆகவே, குத்தகை விஷயத்திலும் தன்னுடைய முத்திரை பதிக்கும் நடவடிக்கையைத் தொடங்கினார். முதல் கட்டமாக குத்தகை நிலங்கள் முழுமையாக அடையாளம் காணப்பட்டன. மாநகராட்சியின் நிலம் குத்தகையில் இருக்கும் முழு தகவல்களும் திரட்டினார். மேயர் சைதை துரைசாமி மேயராக இருந்த வருடத்தின் பட்டியல் மட்டும் அவரிடம் தரப்பட்டது. அதை வாங்கிக்கொண்ட மேயர் சைதை துரைசாமி, முந்தைய 10 ஆண்டு கால தகவல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
அதிகாரிகள் அதிர்ந்தே போனார்கள். பழைய ரிகார்டுகளை எடுத்துப் பார்க்கத் தொடங்கினால் நிறைய குழப்பங்கள் ஏற்படும். ஆகவே, இந்த பட்டியலை வைத்துக்கொண்டு அடுத்த நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரிகள் சமாதானம் செய்தார்கள். ஆனால், மேயர் சைதை துரைசாமி அந்த பதிலைக் கேட்டு திருப்தி அடையவில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்குரிய ரிகார்டு இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று அனைத்து ஆவணங்களையும் பிடிவாதமாக கொண்டுவரச் செய்தார். அத்தனை ஆவணங்களையும் ஆய்வு செய்தார். அப்போது மேயர் சைதை துரைசாமி அதிர்ந்துபோகும் அளவுக்கு சில முறைகேடுகள் தெரியவந்தன.
- நாளை பார்க்கலாம்.