என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 97
சென்னையின் முந்தைய மேயர்கள் பலரும் ஆகாயத் தாமரையை அழிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் முழு பலன் தரவில்லை என்பதால் நவீன முறையில் அவற்றை அகற்றுவதற்குத் திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. இந்தியாவின் பிற மாநிலங்களில், வெளிநாடுகளில் ஆகாயத் தாமரை எந்த வழியினில் அகற்றப்படுகிறது என்று தேடினார்.
அப்போது தான் ஆம்ஃபிபியன் வாகனம் குறித்து சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ஆம்ஃபிபியன் வாகனம், தண்ணீருக்கு வெளியே தென்படும் இலைகள் மட்டுமின்றி, அடியில் இருக்கும் வேர்கள் வரையிலும் முழுமையாக அகற்றிவிடும். அதோடு நீர்நிலைகளின் உள்ளே படிந்திருக்கும் கசடுகள், களிமண், கற்கள் போன்ற தேவையில்லாத அனைத்தையும் அகற்றிவிடும் திறன் வாய்ந்தது.
இந்த வாகனத்தின் விலை 2.08 கோடி ரூபாய் என்றாலும், பெருநகர சென்னையின் மேம்பாட்டுக்கு இதனை வாங்குவது பயனளிக்கும் என்று முடிவு செய்தார் மேயர் சைதை துரைசாமி. ஆனால், சாதாரண ஆகாயத் தாமரையை அகற்றுவதற்கு இத்தனை பணம் செலவழிக்க வேண்டுமா என்று அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் அனைவரிடமும் ஆகாயத் தாமரை விளைவிக்கும் கேடுகள் குறித்து சைதை துரைசாமி பாடமே எடுக்க வேண்டியிருந்தது.
ஒரே ஒரு ஆகாயத் தாமரை செடியில் இருந்து சுமார் 5,000 விதைகள் வெளியாகின்றன. இந்த செடியினால் நீரோட்டம் தடைப்படுவது மட்டுமின்றி நீர்நிலைகளில் இறங்கும் மனிதர்கள், விலங்குகளின் காலில் இந்த செடியின் வேர்கள் மாட்டிக்கொள்வதால் உயிர்ப்பலி ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்றெல்லாம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு கொண்டுவந்தார். நாளை பார்க்கலாம்