அண்ணாமலை டீம் அடுத்த அதிரடி
ரவுடி பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ் தமிழ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் மீது இருக்கும் வழக்கு விபரத்தை அண்ணாமலை டீம் வெளியிட, பதிலுக்கு அவர்கள் அமித் ஷா மீதுள்ள வழக்குகளை எல்லாம் எடுத்துப் போட்டு அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
ரவுடிகள் பட்டியலில் என் பெயர் இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார் அவர் மீது தீண்டாமை SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வேன் என்று செல்வப்பெருந்தகை கூறியிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக சசிகாந்த் செந்தில் களம் இறங்கி அமித் ஷா மீதுள்ள வழக்கு பட்டியல்களை வெளியிட்டார்கள்.
இதற்கு பதிலடியாக செல்வப்பெருந்தகையின் ரவுடித் தனத்தை சசிகாந்த் செந்திலே கூறுவது போல் ஒரு பதிவை பா.ஜ.க. டீம் வெளியிட்டுள்ளது. இதோ அந்த பதிவு.
நிருபர் : ரவுடித்தனம் செய்ததற்காக ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தார்களே அப்ப ஒரு ரவுடி கிடையாதா ?
சசி : அது அவர் புரட்சி பாரதம் கட்சியில் பயணம் செய்த போது நடந்தது அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது .
நிருபர் : சரி அவரை இன்னொரு முறை அதே ஜெயலலிதா குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா ?
சசி : அப்ப அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியில் கிடையாது .
நிருபர் : உங்க கட்சி அலுவலகத்தை அடியாள்களோடு வந்து அடித்து நொறுக்கிறாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா ?
சசி : அப்ப அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார் .
நிருபர் : ஆடிட்டர் பாண்டியன் வழக்கில் போலீஸ் பிடிக்க சென்றபோது சுவர் ஏறி குதித்ததில் கால் முறிந்து விட்டது அப்ப அவர் ரவுடி கிடையாதா ?
சசி : அப்ப அவர் புதிய தமிழகம் கட்சியில் இருந்தார் எங்க கட்சியில் கிடையாது.
நிருபர் : நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியதற்காக போலீசார் ஒருமுறை அவரை கைது செய்தார்களே, அப்ப அவர் ரவுடி கிடையாதா ?
சசி : அப்பதான் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கி இருந்தார்கள் அந்த நேரம் அவர் எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்தார் அப்ப அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது .
நிருபர் : ஏழாவது வகுப்பு பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சாதி சண்டை போட்டு சக மாணவர்களின் சட்டையை கிழித்து போட்டாரே அப்ப ஒரு ரவுடி கிடையாதா ?
சசி : அப்ப அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை மாணவராக இருந்தார் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் கிடையாது. என்று கூறுவதாக வெளியிட்டுள்ளனர்.
பா.ஜ.க.வில் மட்டும் தான் ரவுடிகள் இருக்கிறார்கள் என்று பார்த்தால், காங்கிரஸ் கட்சித் தலைவரும் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை போலிருக்கிறதே.