இந்தியா முழுக்க கொந்தளிப்பு
மனதில் இருப்பது சில நேரங்களில் வாய் வழியே வந்துவிடும். அப்படித்தான், ‘அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு அம்பேத்கரை அவமானப்படுத்தியற்கு பதிலடியாக நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு சீட்டிலும் அம்பேத்கர் படத்தை வைத்து புரட்சி செய்திருக்கிறார்கள்.
வழக்கமாக வெள்ளை நிற டீ சர்ட்டில் வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நீல நிற டி-ஷர்ட் அணிந்துவந்து போராட்டத்தில் குதித்தார். இந்த போராட்டத்தைத் திசை திருப்புவதற்காக ராகுல் காந்தி தள்ளிவிட்டார் அதனால் இரண்டு எம்.பி.க்கள் ஐ.சி.யு.வில் இருக்கிறார்கள் என்று திசை திருப்பும் அரசியலில் பா.ஜ.க. குதித்தது. அதோடு ராகுல் காந்தியை கைது செய்து பிரச்னையை மடை மாற்ற நினைக்கிறார்கள்.
ஆயிரம் அமித்ஷாக்கள் ஒன்றுகூடினாலும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை மறைக்க முடியாது. அண்ணல் அம்பேத்கரை என்றுமே பாஜக மதித்தது கிடையாது. தலித்துகளின் வாக்குகளுக்காக அண்ணலின் பெயரை பயன்படுத்தியது. அரசியலுக்கு மட்டுமல்ல, அஞ்சலி செலுத்தவும் அண்ணலையோ, அம்பேத்கரின் மணிமண்டபத்திற்குள் சங்கிகள் நுழைவதை இனி நாம் அனுமதிக்க முடியாது என்று போராடுகிறார்கள்.
அது மட்டுமின்றி, ‘’அம்பேத்கரை வணங்குபவர்களால் இனி பாஜகவை ஆதரிக்க முடியாது! பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?’’ என்று நிதிஷ் குமார் மற்றும் சந்தரபாபு நாயுடுவுக்கும் கேள்வி கேட்கிறார்கள்.