தமிழிசையை இப்படி கேவலப்படுத்திட்டாரே.
பல்கலை மாணவிக்குப் பாதுகாப்பு கொடுக்காத தமிழக அரசை பதவியில் இருந்து இறக்குவதற்கு அண்ணாமலை நடத்திய சவுக்கடி போராட்டம் இன்று செமையாக வைரலானது. அந்த போராட்டத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் போராட்டம் நடத்தினர் அவரை நாயை பிடிப்பது போல காவல்துறை கைது செய்து அடைத்து வைத்துள்ளது. எங்கள் தொண்டர்களை எல்லா போராட்டங்களின் போதும் இப்படியே காவல்துறை நடத்துகிறது’’ என்று போகிற போக்கில் தமிழிசையை நாய் என்று விமர்சனம் செய்தார்.
அண்ணா பல்கலையின் முழு நிர்வாகமும் கவர்னர் ஆர்.என்.ரவியின் கையில் தான் இருக்கிறது. அவர் தானே துணைவேந்தர் நியமனம் செய்கிறார், அவர் தானே அங்கே நடக்கும் அத்தனை சிக்கலுக்கும் காரணம் என்பது வெளியே வந்துவிடக் கூடும் என்பதாலே அண்ணாமலை சாட்டையடிப் போராட்டம் நடத்தி விஷயத்தை திசை திருப்புவதாக தி.மு.க.வினர் விமர்சனம் செய்கிறார்கள்.
அதோடு, ‘’உண்மையாகவே தன்னை வருத்திக்கொள்வதாக இருந்தால் மாட்டு வண்டி சாட்டை அல்லது குதிரை வண்டி சாட்டையை பயன்படுத்தியிருக்க வேண்டும், கிராமப்புற கலைஞர்கள் பயன்படுத்தும் சாட்டையில் அடித்துக்கொண்டால் வலிக்காது வெறும் சத்தம் தான் வரும். எதற்கு இந்த வீண் நாடகம்?’ என்று கிண்டல் அடிக்கிறார்கள்.
இந்த நிலையில் வழக்கம்போல் அடுத்த ஆதாரபூர்வமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் திருச்சி சூர்யா. அவர் இன்று, ‘’அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம் ஆறு தடவை அல்ல ஆயிரம் தடவை நீங்கள் சாட்டையில் அடித்துக் கொண்டாலும் நீங்கள் செய்த பாவங்கள் நீங்காது என் கேள்விகளும் நிக்காது.
கடந்த மூன்று வருடத்தில் உங்க மனைவி அகிலாவின் பிஸினஸ் பல நூறு கோடியாக வளர்ந்தது எப்படி? மனைவி பங்குதாரராக இருக்கும் பல நிறுவனங்களில் ஒன்றான Burrow Properties Private Limited, இதன் துணை நிறுவனம்தான் Lands and Lands Ventures Private Limited, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் Lands & Lands Ventures Private Limited நிறுவனம் கோவையில் சுமார் 23 இடங்களில் குறைந்தபட்சம் ₹2000 கோடி மதிப்புள்ள திட்டங்ளை செயல்படுத்தி வருகிறது.
லேட்டஸ்டாக, 2024 தேர்தலுக்கு பிறகு பழமுதிர் தோட்டம் என்ற பெயரில் நூறு கோடி மதிப்பில் பார்ம் ஹவுஸ் திட்டம் போட்டுள்ளனர். இந்த நிறுவனங்கள் மூலம் 2023ல் சூலூர் செலக்கரச்சல் கிராமத்தில் பல கோடி மதிப்புள்ள சைட் பூமியை உங்கள் மனைவி வாங்கியுள்ளார். G Square பற்றி வானத்துக்கும் பூமிக்கும் குதித்த நீங்கள் இதை பற்றி என்ன விளக்கம் தர போகிறீர்கள்? Burrow Properties நிறுவனத்தில் உங்கள் மனைவி பங்குதாரர் என்பது உங்கள் அரவக்குறிச்சி தேர்தல் அபிடவிட்டிலேயே இருக்கிறது அதனால் தாங்கள் இதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மனைவியை ஆச்சும் நெருங்கிய உறவு என்று ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
நல்ல கேள்வியா இருக்கு, பதில் சொல்வாரா சாட்டையடி அண்ணாமலை?