என்ன செய்தார் சைதை துரைசாமி – 244
பொதுவாக பேருந்து சாலைகளில் கான்கிரீட் கெர்புகளை வரிசையாக அடுக்கிவைத்து, மத்திய சாலைத் தடுப்புகள் அமைப்பதுதான் சென்னை மாநகராட்சியின் வழக்கமாக இருந்துவந்தது. கடமைக்காக செய்யப்படும் இந்த தடுப்பான்கள் ஒருசில மாதங்களில் மண், தூசுக்கள் படிந்து, அழுக்கடைந்து மிகவும் அருவருக்கத்தக்க ஒன்றாக மாறிவிடும். எனவே, சாலைத் தடுப்பான்களைப் பார்த்தாலே முகம் சுளிக்கும் நிலையே நிலவியது9.
இதனை மாற்றி புதுமையாக அமைப்பதற்கும் மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை எடுத்தார். மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனைப்படி சாலை அகலத்திற்கு ஏற்ப, நவீன வடிவமைப்புகளுடன் கூடிய தடுப்பான்கள் பேருந்து சாலைகள் முழுவதும் அமைக்கப்பட்டன.
60 அடியில் இருந்து 80 அடி அகலம் வரை உள்ள சாலைகளில் கிரானைட் மத்திய தடுப்பான்கள் அமைக்கப்பட்டு, அதன் நடுவில் கண்களுக்குக் குளிர்ச்சியான எழில்மிகு செடிகள் வளர்க்கப்பட்டன. இந்த செடிகளை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்கும் வகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கைப்பிடிகள் கிரானைட் மத்திய தடுப்புக்கு மேல் அமைக்கப்பட்டன. அதனால் சாலைகள் மேலை நாட்டுக்கு இணையான புதுப் பொலிவுடன் திகழ்ந்தன.
60 அடிக்கு குறைவான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இந்திய சாலைகள் ஆணையகமான, ஐ.ஆர்.சி. வடிவமைப்பு செய்திருக்கும்படி, இரும்பு மற்றும் கான்கிரீட் கூம்பு வடிவிலான மத்திய தடுப்பான்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மீது வர்ணம் பூசப்பட்டு மிளிரும் ஸ்டட்கள் அமைக்கப்பட்டு இரவில் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டன.
40 அடி அகலத்திற்கு குறைவான பேருந்து சாலைகளில் ஒன்றரை அடி உயரமுள்ள கான்கிரீட் அடித்தளம் மற்றும் மூன்றரை அடி உயரமுள்ள ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மத்திய தடுப்புகள் அமைக்கப்பட்டன. இவை மட்டுமின்றி, முந்தைய காலங்களில் செங்கல் கட்டுமானம் கொண்டு அமைக்கப்பட்டிருந்த சிதிலமடைந்த போக்குவரத்து தீவுத் திட்டுகளும் நவீன வடிவமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி புதிய கிரானைட் கற்களைக் கொண்டு சிங்கம், யானை போன்ற உருவங்களும், அழகிய செடிகள் வளர்த்தும் நகருக்கு எழில் ஊட்டும் பணிகள் மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டன. இவை எல்லாமே மேயர் சைதை துரைசாமியின் கைவண்ணம் என்று பாராட்டும் வகையில் அமைந்தன.
- நாளை பார்க்கலாம்