என்ன செய்தார் சைதை துரைசாமி – 314
சென்னை மாநகர மேயராக சைதை துரைசாமி குப்பை மேலாண்மைக்கு ஏராளமான ஆலோசனைகள் கூறியது மட்டுமின்றி, நடைமுறைக்கும் கொண்டுவந்து காட்டியிருக்கிறார். சின்னச்சின்ன பிரச்னைகளையும் கண்டறிந்து அதற்குத் தீர்வுகள் வழங்கியிருக்கிறார்.
குப்பைத் தொட்டிகள் தெருக்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சில பகுதிகளில் மட்டும் விரைவில் நிரம்பிவிடும். எனவே, அதன் பிறகு போடப்படும் குப்பைகள் எல்லாமே ரோட்டில் வீசப்படும். அந்த இடமே அவலட்சணமாகக் காட்சியளிக்கும். அதேநேரம், ஒருசில இடங்களில் குப்பைத் தொட்டி நிறையாமல் கிடக்கும். அதேபோல், கல்யாண மண்டபம், மார்க்கெட் போன்றவை இருக்கும் பகுதிகளில் அவ்வப்போது குப்பைகள் வழிந்து கிடக்கும். இவற்றை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எப்போதும் போல் எல்லா இடங்களுக்கும் ஒரே நேரத்தில் குப்பை லாரி வந்து அள்ளிப் போகும்.
இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தார் மேயர் சைதை துரைசாமி. இந்த பிரச்னையைத் தடுப்பதற்கு பல குப்பைத் தொட்டிகளை ஒரே இடத்தில் வைக்கும் திட்டத்தை மேயர் சைதை துரைசாமி சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக செயல்படுத்தினார். ஒரே இடத்தில் இரண்டு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குப்பைத் தொட்டி வைப்பதும் நடைமுறைக்கு வந்தது.
ஆரம்பத்தில் இதை ஏளனமாகப் பார்த்தவர்கள், குப்பைகள் நிரம்பி வழிவது தடுக்கப்பட்டதையும், ரோடு அசுத்தப்படாமல் இருப்பதையும் கண்டு ஆச்சர்யமானார்கள். இந்த இரட்டைக் குப்பைத் தொட்டித் திட்டம் ஏராளமான இடங்களில் சிறப்பான பயன் கொடுத்தது. இதையடுத்து, ஜியோ பென்சிங் சிஸ்டம் எனும் புவியியல் குறியீடு முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதனால் குப்பைத் தொட்டிகளை தலைமையகத்தில் இருந்து கண்காணிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குப்பை மேலாண்மையில் முடிந்த வரையிலும் நவீனத்துவத்தையும் புதிய டெக்னாலஜிகளையும் அறிமுகம் செய்தவர், மேயர் சைதை துரைசாமி மட்டும் தான்.
- நாளை பார்க்கலாம்.