பாலங்கள் பராமரிப்பில் சாதனை

Image
  • என்ன செய்தார் சைதை துரைசாமி –  266

மேயர் சைதை துரைசாமி காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மிகவும் சிறப்பாகப் பயன்படுகிறது என்று இன்றும் மக்கள் பாராட்டுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம், அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை மற்றும் அக்கறையே ஆகும். செய்வதை திருத்தமாகவும் கூடுதல் பயனுள்ளதாகவும் செய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றினார்.

பாலங்கள் கட்டுவது மட்டுமின்றி, பாலங்களை பராமரிப்பதற்கும் மேயர் சைதை துரைசாமி காலத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. பெருநகர சென்னையில் மோசச்மாக இருந்த பல்வேறு மேம்பாலங்களில் ஸ்டிரிப் சீல் எக்ஸ்பேன்சன் ஜாயின்ட்ஸ் மாற்றியமைத்து புதிய வழியில் பழுது பார்க்கப்பட்டன. சர்தார் பட்டேல் சாலை மற்றும் டாக்டர் முத்துலட்சுமி சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் எபாக்ஸி வர்ணம் பூசி பாதுகாக்கப்பட்டது.  

கோடம்பாக்கம் மேம்பாலத்தினை பழுது பார்த்து மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கியப் பணிகளுடன் நடைபாதை, படிக்கட்டுகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் துரு பிடிக்காத எஃகு கைப்பிடிகள் அமைக்கப்பட்டன. கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள 2 பாலங்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்தும் பணிகளும் நடந்தன.

உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சந்திப்பில் உள்ள மேம்பாலம் மற்றும் டர்ன்புல்ஸ் சாலை  மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் எபாக்ஸி வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டன. ஆலந்தூர் சாலையிலுள்ள பாலத்தை அபிவிருத்தி செய்து மேம்படுத்தும் பணியும், துரைசாமி சுரங்கப்பாதையின் கிழக்கு பக்கம் அணுகு சாலை பாலம் அமைக்கும் பணியும் சிறப்புற நடந்தேறின.

தன் மேயர் பதவிக் காலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில், அடுத்த 20 ஆண்டுகளுக்கு எவ்விதமான மேம்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு செயல்படுத்தினார் மேயர் சைதை துரைசாமி. இப்படி ஒரு திட்டமிட்ட செயல்பாடு எந்த ஒரு மேயரிடமும் கண்டதில்லை என்று அதிகாரிகள் இன்றும் வியக்கிறார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment