• Home
  • அரசியல்
  • திருமாவுக்கு ஆதவ்.. கமலுக்கு வினோதினி

திருமாவுக்கு ஆதவ்.. கமலுக்கு வினோதினி

Image

ஸ்டாலினைப் போட்டு இப்படி அடிக்கிறாங்களே…

விமான சாகச விபத்தில் 5 பேர் பலியான தகவல் அறிந்ததும் வி.சி.க.வின் ஆதவ் அர்ஜுனா கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு திருமாவளவன் மென்மையான அறிக்கை வந்தது. அதாவது தி.மு.க.வை எதிர்த்து ஆடுவதற்கு ஆதவை பயன்படுத்துகிறார் என்று திருமாவளவன் மீது தி.மு.க.வினர் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் தி.மு.க. ஆதரவு நிலை எடுத்திருக்கும்போது, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகியும் சினிமா நடிகையுமான வினோதினி மழை விவகாரத்தில் தி.மு.க.வை ஏகமாக நைய்யாண்டி செய்திருக்கிறார்.

அவரது பதிவில், ‘’இது வரலாறு காணாத மழை. மழை வடிய 8 மணி நேரம் ஆகும். நீங்க ஏன் 2 மணி நேரத்துல போட்டோ போடறீங்க? எல்லா மழை நீர் வடிகால்கள் வேலையும் முழுசா முடிஞ்சிடுச்சு மழைநீர் வடிகால் வேலை 92.6 சதவீதம் முடிஞ்சிருக்கு ஒரு பத்து நாள் பாலில்லாம இருக்க முடியாதா ப்ரெட்டுதான் வேணுமா செம்பரம்பாக்கத்த பத்தி தெரியுமா மழைநீர் வடிகால் வேலை 87.65 சதவீதம் முடிஞ்சிருக்கு

இத்தன மக்கள் ஏன் ரோட்டுல போறாங்க வீட்டுலயே இருங்க மஹாமஹம் தெரியுமா பாப்ரி மஸ்ஜித் தெரியுமா லண்டன்ல கூட மழை பேஞ்சா தண்ணி நிக்கும் தெரியுமா ரெண்டு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம் அஞ்சு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம் மூணு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம் மழைநீர் வடிகால் வேலை 91.35 சதவீதம் முடிஞ்சிருக்கு.

ஸ்பெயின்ல கூட மழை பேஞ்சா தண்ணி நிக்கும் தெரியுமா ஒரு பத்து நாள் சாப்பிடாம இருக்க முடியாதா வயசானவங்க எதுக்கு அந்த இடத்துக்கு மழையில போனாங்க, மெட்ரோ வர்க்கு ஆறு வருஷமா நடக்குதுன்னு தெரியாதா இது வரலாறு காணாத மழை போட் கொஞ்சம் தாமதமாதான் வரும், பொறுங்க உபில போயி பாருங்க, இதை விட கேவலமா இருக்கும் ரோடு தூத்துக்குடி தெரியுமா அதுக்கு யாரு காரணம் நீங்க இதெல்லாம் கேள்வி கேக்குறீங்க அப்போ நீங்க சங்கி மாமா இந்த ஐடிய என்னன்னு பாத்து முடிச்சுவிடு பொதுமக்கள் மேலையும் பொறுப்பு இருக்கு பொதுமக்கள் தான் பொறுப்பு பொதுமக்கள் ஏன் பொதுமக்களா இருக்காங்க – ஒரு ஆய்வு மேயரை கேள்வி கேட்க திராணியிருக்கும் உனக்கு இதே நிதி அமைச்சரைக் கேட்க திராணி இருக்கா? நீ சங்கி இந்தா மாட்டு சாணி, சாப்பிடு.

மழைநீர் வடிகால் வேலைகள் 95.67 சதவீதம் முடிஞ்சிருக்கு இவனுங்களே தாழ்வான பகுதிகள்ல வீடு கட்டுவானுங்களாம் இப்போ குத்துதே குடையுதேம்பானுங்களாம் நீ மாமி நீ இதெல்லாம் கேக்காத நீ டயர் நக்கி நீ இதெல்லாம் கேக்காத நீ சோம்பி நீ இதெல்லாம் கேக்காத நீ நாயுடு நீ இதெல்லாம் கேக்காத நீ கவுண்டர் நீ இதெல்லாம் கேக்காத நீ ரெண்டு கை உள்ளவன் நீ இதெல்லாம் கேக்காத பெண் அதிகாரி மேல ஆசிட் ஊத்துன வரலாறு தெரியுமா ஒரு பத்து நாள் கரண்ட் இல்லாம இருக்க முடியாதா?

 வேளா வேளைக்கும் உங்களுக்கெல்லாம் சாப்பிட்டுதான் ஆகணுமா நீ அமெரிக்கால உக்காந்துட்டு இத பத்தி பேசாத நீங்கல்லாம் இறங்கி வேலை செய்ய வேண்டியதுதானே, வெறும் வரிகட்டிட்டு வீட்டுக்குள்ளேயே உக்காந்துப்பீங்களா மாமா இந்த ஐடி என்னன்னு பாத்து முடிச்சுவிடு, ஓவரா பேசுது நீ நாலு பேருகூட போனவதானே இரு உன் பழைய போட்டோலாம் போடுறோம் இது வரலாறு காணாத மழை சிட்னில கூட மழை பேஞ்சா தண்ணி நிக்கும் ஆறு பேரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம்’ என்று கிண்டல் செய்திருக்கிறார்.

உடன்பிறப்புகள் என்னவெல்லாம் முட்டுக் கொடுப்பார்களோ, அதை எல்லாம் தாக்கித் தகர்க்கிறார் வினோதினி. ஆனாலும் திருமா, கமல்ஹாசனை எல்லாம் தூக்கி ஸ்டாலின் சுமந்துகொண்டு தான் இருப்பார். இது தாங்க அரசியல்.

Leave a Comment