சிங்கப்பூரில் வித்தியாசமான ஆய்வு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 345

சிங்கப்பூருக்குச் செல்லும் ஒவ்வொரு நபரும் அங்கிருக்கும் அங்கிருக்கும் அனைத்து சுற்றுலா ஸ்தலங்களுக்கும் சென்று பார்வையிடுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். முக்கியமான இடங்களை பார்வையிடத் தவறிவிடக் கூடாது என்று சுற்றிப் பார்ப்பதற்குத் தீவிரம் காட்டுவார்கள். ஆனால், மேயர் சைதை துரைசாமியின் ஆர்வம் வேறாக இருந்தது.

உலகின் முக்கியமான மாநகரங்களைச் சேர்ந்த மேயர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு சிங்கப்பூர் சென்ற மேயர் சைதை துரைசாமி, அங்கு சென்றதுமே நகரை சுற்றிப் பார்க்கக் கிளம்பினார். முதல் நாளில் சிங்கப்பூரில் மேயர் சைதை துரைசாமி பார்வையிட்ட இடங்கள் எல்லாமே வித்தியாசமானவை.

‘லிட்டில் இந்தியா’ பகுதிக்குச் சென்ற மேயர் சைதை துரைசாமி அங்கு குப்பை எந்த வகையில் சேகரிக்கப்படுகிறது, எப்படி பிரித்து சுத்தம் செய்யப்படுகிறது என்று ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் மழைநீர் கால்வாய், நடைபாதை, மின்மாற்றிகள் சாலையில் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்வையிட்டார்.

உலகமெங்கும் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருகிறார்கள். அவர்கள் சுலபமாக பயணிப்பதற்கும், மொழி பிரச்னை இல்லாமல் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்ப்பதற்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று பார்வையிட்டார். சிங்கப்பூரில் தனி மனிதருக்கு அனைத்து வகையான வசதிகளும் செய்து தரப்படுகிறது என்பதை அறிந்திருந்தார். எனவே, மக்கள் வசிக்கும் வீடுகளுக்கும் தொழில்முறை அலுவலகங்களுக்கும் மின்சாரம், குடிநீர் எந்த வகையில் இடையூறுகள் இல்லாமல் கொடுக்கப்படுகிறது என்பது குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.  

சிங்கப்பூரில் கடைபிடிக்கப்படும் நவீன தொழில்நுட்பங்களை எல்லாம் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா, அதற்கு என்னென்ன புதிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் ஆய்வுகள் மேற்கொண்டது மட்டுமின்றி சிங்கப்பூர் தொழில்நுட்ப அதிகாரிகளுடன்  விரிவான  ஆலோசனை நடத்தினார்.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment