நெசப்பாக்கம் சாலைக்கு ஒரு புதிய தீர்வு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 204

சாவி இல்லாமல் பூட்டுகள் செய்யப்படுவதில்லை. பிரச்னை என்று இருந்தால் நிச்சயம் தீர்வும் இருக்கும் என்பதே மேயர் சைதை துரைசாமியின் நம்பிக்கை. அப்படித் தான் நெசப்பாக்கம் சாலைக்கு வேறு தீர்வு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்த பிறகும் மாற்று யோசனை இருக்கும் என்று உறுதியாக நம்பினார்.

அப்படித்தான், ‘சென்னை பெருநகர  குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் பம்பிங் ஸ்டேஷன் வழியாக நெசப்பாக்கம் அண்ணா பிரதான சாலையையும், பிள்ளையார் கோவில் தெருவையும், இணைத்து  ஓர் இணைப்புச் சாலை அமைத்துவிட்டால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்’ என்று ஒரு தீர்வு இருப்பதைக் கண்டுபிடீத்தார்.

இந்த தீர்வை நோக்கி செயல்படுவதற்காக மேயர் சைதை துரைசாமியுடன்  முதல்வர் அலுவலகச் செயலாளர் சுடலைக்கண்ணன் ஐ.ஏ.எஸ்., விக்ரம்கபூர் ஐ.ஏ.எஸ். மற்றும் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ். ஆகிய அனைவரும் அந்த பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். மேயர் சைதை துரைசாமி போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கு சரியான தீர்வை கண்டுபிடித்திருக்கிறார் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

அதேநேரம், இது நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை என்று, சென்னை பெருநகர  குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ். கை விரித்தார். இதனை செயல்படுத்துவது என்றால் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல் இருப்பதால் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றே அதிகாரிகளும் தட்டிக் கழிப்பதில் குறியாக இருந்தார்கள்.

ஆனால், மேயர் சைதை துரைசாமி மட்டும் அத்தனை எளிதில் அந்த வாய்ப்பை நழுவ விடுவதாக இல்லை. எப்படியாவது அந்தத் திட்டத்தை நிறைவேற்றி மக்களுக்கு போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலை தரவேண்டும் என்பதில்  பிடிவாதமாக இருந்தார்.  

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment