90 ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 174

சைதை துரைசாமி பெருநகர சென்னையின் மேயராகப் பொறுப்பேற்றதும் மழலையர் பள்ளிகள் உருவாக்கத்தில் ஒரு புரட்சி செய்தார் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். அவர் பதவிக்கு வந்த நேரத்தில் மொத்தமே 30 மழலையர் பள்ளி மட்டுமே இயங்கிவந்தன. 427 கி.மீ. பரப்பளவு கொண்ட பெருநகர சென்னைக்கு இந்த எண்ணிக்கை கொஞ்சமும் பொருத்தமே இல்லை என்பதால் 200 வார்டுகளிலும் உடனடியாக ஒரு மழலையர் பள்ளிகள் தொடங்குவதற்கு உத்தரவு போட்டார்.

அதேபோன்று பூங்காக்கள் உருவாக்கத்திலும் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தார் மேயர் சைதை துரைசாமி. 300 பூங்காக்கள் புதிதாக தொடங்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டார். இத்தனை பெரிய எண்ணிக்கையில் பூங்கா தொடங்குவது சாத்தியமில்லை, கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டமிடலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை சொன்னார்கள்.

ஆனால், தன்னுடைய நீண்டகாலத் திட்டத்தால் மக்களுக்கு சிறப்பான பயன் கிடைக்கும் என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருந்தார். இத்தனை பெரிய சென்னை நகரத்துக்கு இந்த எண்ணிக்கையே மிகவும் குறைவு என்றே எண்ணினார். எனவே, முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்த திட்டத்தை விளக்கமாக எடுத்துக்கூறி அனுமதியும் பாராட்டும் பெற்றார்.

முதல்வர் அனுமதியின் பேரில் 106 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருநகர சென்னை முழுவதும் 300 பூங்காக்கள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டன. பெருநகர சென்னை உருவான 90 ஆண்டுகளில் அதாவது 1919 முதல் 2011 வரை மொத்தமிருத 260 பூங்காக்களை விட அதிக எண்ணிக்கையில் சென்னைக்கு ஒரே நேரத்தில் 300 பூங்கா கொண்டுவருவதற்கு தீவிரமாக களம் இறங்கினார் சைதை துரைசாமி.

தன்னுடைய ஐந்தாண்டு காலத்திற்குள் 300 பூங்காக்களையும் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக களம் இறங்கினார். ஆக்கிரமிப்பு அகற்றம், நீதிமன்றச் சிக்கல் போன்ற காரணங்களால் அவரது ஐந்தாண்டு காலத்தில் 300 பூங்காக்களையும் திறக்க முடியவில்லை என்றாலும், 266 புதிய பூங்காக்களை திறந்து சாதனை படைத்தார். மீதமுள்ள பூங்காக்களும் அவரது காலத்திற்குப் பின் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

பூங்கா நகரம் என்று பெயர் சூட்டப்படும் வகையில் திரும்பும் திசையெங்கும் சென்னையில் பூங்காக்கள் காட்சியளிக்கின்றன என்றால் அதற்குக் காரணம் மேயர் சைதை துரைசாமியின் சீரிய நடவடிக்கைதான் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இன்றும் பாராட்டி வருகிறார்கள்.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment