குப்பை மேலாண்மைக்கு வித்தியாசமான சிந்தனை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 294

பொதுவாக மேயர்  பணியை அரசியவாதிகள் பகுதி நேரமாக மட்டுமே செய்வார்கள். ஆனால், சென்னையின் முழு நேர மேயராக சைதை துரைசாமி மட்டுமே பணியாற்றினார். சென்னையின் மேம்பாட்டுக்காக அதிகாலை முதல் இரவு வரை 19 மணி நேரம் உழைத்துக்கொண்டே இருந்தார். அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களை சந்திக்க நேர்கையில் எல்லாம், சென்னை மேம்பாட்டுக்கு ஏதேனும் திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு மேயர் பணியில் ஆழ்ந்து பணியாற்றினார்.

பெருநகர சென்னையின் குப்பை பிரச்னையைத் தீர்ப்பதற்கு பல்வேறு புதுப்புது வழிகள் மேற்கொண்டார் என்பதைப் பார்த்துவருகிறோம். இந்த வரிசையில் குப்பை மேலாண்மைக்கு மிகவும் வித்தியாசமான ஒரு திட்டத்தை மேயர் சைதை துரைசாமி உருவாக்கினார்.

சைதாப்பேட்டையில் நடத்திவந்த மலிவு விலை உணவகத்தை அம்மா உணவகமாக மாற்றி தமிழகம் முழுக்கவும் கொண்டுபோய் சேர்த்தார். அதேபோன்று இந்த திட்டமும் அன்றைய முதல்வருக்கு நல்ல பெயர் வாங்கித்தர வேண்டும் என்பதற்காக புதிய திட்டம் உருவாக்கி, அதில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு மிகத் தெளிவாக வரையறை செய்தார். முழுமையாக ஒரு திட்ட அறிக்கை போன்று தயாரித்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கொண்டுபோனார்.

மேயர் சைதை துரைசாமி எந்த ஒரு திட்டம் கொண்டுவந்தாலும், அதில் மக்கள் நலன் மட்டுமே பிரதானமாக இருக்கும் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அந்த அறிக்கையை வாங்கிப் பார்த்து பிரமித்துவிட்டார். இது போன்ற சிந்தனை உங்களுக்கு மட்டும் எப்படி உருவாகிறது… மிகவும் சிறப்பான திட்டமாக இருக்கிறது. அம்மா உணவகம் போன்று இதுவும் வெற்றிகரமாக பேர் சொல்லக்கூடியதாக இருக்கும். எனவே, இதனை மிகப்பெரிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும்…

அரசுக்கு எந்த செலவும் இல்லாமல் குப்பை அகற்றுவதற்கு ஒரு நல்ல திட்டத்தைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். இதனை கண்டிப்பாக நிறைவேற்றுவோம், பெரிய அளவுக்கு தமிழகம் முழுக்க நிறைவேற்றுவோம்’’ என்று பாராட்டினார் ஜெயலலிதா.

அது எப்படிப்பட்ட திட்டம்…?

– நாளை பார்க்கலாம்.

Leave a Comment