கேள்வி : ஞானகுருவே, கடவுளை தரிசனம் செய்திருக்கிறீர்களா? ஆம் என்றால் அனுபவம் எப்படி இருந்தது? – எஸ்.விவேகானந்தன், மயிலாடுதுறை.
ஞானகுரு :
நான் பேயைப் பார்த்தேன், ஆவி என்னை மிரட்டியது என்று சொன்னால் எல்லா மனிதர்களும் நம்புவார்கள். அதேநேரம், கடவுளை தரிசனம் செய்தேன் என்று சொன்னால் அதனை நம்புபவர்கள் மிகவும் குறைவு. ஏனென்றால், கடவுள் மீது மனிதர்களுக்கு அத்தனை நம்பிக்கை.
இந்த உலகு வாழ்வு என்பது சொர்க்கம் போன்றது. இங்கு இல்லாத நன்மை, இன்பம் வேறு எங்கும் இல்லை. இந்த உலகம், இந்த உடல் ஆகியவையே கடவுள். ஆகவே, நான் கடவுளை தரிசித்துவிட்டேன். நீங்களும் அந்த கடவுளை தரிசித்துப் பாருங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்.
gyaanaguru.com Changed status to publish September 14, 2024