ஞானகுரு மந்திரச் சொல்
வரிசை 6
- கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை.
- கடவுளின் இருப்பை நாத்திகனைவிட, ஆத்திகனே அதிகம் சந்தேகப்படுகிறான்.
- எந்த வேலைக்கு நீ முன்னுரிமை கொடுக்கிறாய் என்பதில்தான், உன்னுடைய வெற்றி இருக்கிறது.
- தோல்வி கிடைக்குமோ என்ற எண்ணம் வந்துவிட்டால், நிச்சயம் தோல்விதான்.
- கேள்வியே கேட்காமல் முட்டாளாக இருப்பதைவிட, கேள்வியைக் கேட்டு முட்டாள் ஆகலாம்.
- எந்த ஒரு வெற்றியும் முடிவு அல்ல, தோல்விக்கு காத்திரு.
- கொடுப்பதற்கு எதுவும் இல்லையா, புன்னகையைக் கொடு..
- சண்டை போடாமல் எதிரியை வெல்வதுதான் உண்மையான போர்க்கலை.
- வறுமையைவிட மதமே நிறைய மனிதர்களை கொலை செய்திருக்கிறது.
- வாழ்வது ஒரு முறைதான். சந்தோஷத்தை தள்ளிப் போடாதே.
- அதிர்ஷ்டம் என்பது உன் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு.