ஞானகுரு :
சுற்றம் சூழ நின்று, உங்கள் பெருமைகளைப் பேசி அனைவரும் அழுது புலம்பி வழியனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். யாருடைய மரணத்தையும் யாரும் பார்க்க விரும்புவதில்லை.
படுக்கையில் படுத்ததும் எந்த நொடியில் தூக்கம் கண்களைத் தழுவுகிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறாயா? அதுபோல் உங்களுக்குத் தெரியாமலே உங்களிடம் இருந்து உயிர் பிரிய வேண்டும். பூக்களில் இருந்து வாசம் வெளியேறுவதைப் போல், ஊதுபத்தியில் இருந்து புகை வெளியேறுவதைப் போல் இயல்பாக உயிர் வெளியேற வேண்டும். பறவைகள், மிருகங்களின் இயற்கை மரணத்தை யாரும் பார்த்ததேயில்லை. அப்படி ஒரு மரணத்துக்காக அன்புடன் காத்திருங்கள். உங்கள் ஆசைப்படியே நடக்கட்டும்,
gyaanaguru.com Changed status to publish
