நெகிழ வைக்கும் கவிதைகள்
வரிசை 1
சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. அப்படி சில கவிதைகள் இங்கே
வாழ்க்கை
எதையேனும் சார்ந்திரு
கவித்துவம், தத்துவம், காதல்
இங்கிதம் சங்கிதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல்
உலகம் காணாமல் போய்விடும்.”
- வண்ணநிலவன்
தரிசனம்
கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
- ஆத்மாநாம்
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
- நகுலன்
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
- பிரமிள்