தமிழ்லீடர் சிறந்த கதை, திரைக்கதை விருது

 பிரவீன் ; ஆர்யன்

கிரைம் தொடர்பான படங்கள் இயக்குவதுதான் மிகவும் சிரமம்” என்பதாக Screeplay King என்றழைக்கப்படுகிற இயக்குனர் பாக்கியராஜே கூறியிருக்கிறார். அப்படியிருக்க அசாத்திய தைரியத்தில் ‘ஆர்யன்’ படத்தில் இதுவரை தமிழில் தொடாத புதிய பாணியில், வில்லன் இறந்த பின்னரும் கொலைகள் தொடர்ச்சியாக நடக்கிறது என்ற ’நாட்’டை வைத்து நேர்த்தியாக கதையை அமைத்து, அதனைப் பிசிறு தட்டாமல் விறுவிறுப்பான திரைக்கதையாக்கி நமக்கு அளித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரவீன்.

அதிலும், கிளைமேக்ஸில் படம் முடியும்போது உடைபடும் ட்விஸ்ட் வேறு ரகம். நடிகருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதை மீதும் திரைக்கதை மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் பிரவீன் சிறந்த கதை, திரைக்கதைக்கு விருது பெறுகிறார்.

Leave a Comment