கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
அகங்காரம்
ஒரு செயல்
நடந்தது அல்லது நடக்கவில்லை
என்பதன்றி,
ஒரு செயலை
வெற்றி என்றும் தோல்வி என்றும்
பிளப்பது
அகங்காரத்தின் வேலை.
- பாதசாரி
மிருகம்
விடுபடும்
சகல வழிகளும்
சாத்தியப்பட்டுவிட்ட போதிலும்
இறந்த பாகனுக்கு அழுது
அடுத்த பாகனுக்கும்
மண்டியிடுகிறது
அன்புக்கு பழக்கப்பட்ட
மிருகம்.
- நேசமித்ர