கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
அறிமுகம்
என்னைப் பற்றி
எனக்குத் தெரிந்ததே
கொஞ்சத்திலும் கொஞ்சம்
இதில் எதைப்பற்றியும்
யார் குறித்தும்
அபிப்ராயம் சொல்ல
நான் யார் ?
- விக்ரமாதித்யன்
உலகே மாயம்
யாரோடும் நின்று போவதே இல்லை இந்த உலகம்.
எவர் வாயிலும் இல்லை இவ்வுலகின் இறுதிச் சொல்.
உண்மையில் எந்த பாதையும் எங்கும் முடிவடைவதில்லை
உங்கள் பாதையிலிருந்து தப்புக
உங்கள் மந்தையிலிருந்து தப்புக
உலகம் அப்படியொன்றும் சிறியதல்ல
கூடவே
இன்னும் ஒரு துளி அதிகமாய் அன்பு செய்.
இன்னும் கொஞ்சம் இறுக்கமாய் அணைத்துக் கொள்.
இனி எல்லாம் நலமாகும்.
வாழ்வோம் இனி.
– செல்மா பிரியதர்ஷன்