• Home
  • யாக்கை
  • பாம்பு, முட்டை மருத்துவ முட நம்பிக்கை

பாம்பு, முட்டை மருத்துவ முட நம்பிக்கை

Image

தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்

கிராமப்புறங்களில் இன்றும் பாம்புக்கடி அவ்வப்போது நடக்கிறது. அப்படிப்பட்ட தருணங்களில், என்ன வகை பாம்பு கடித்தது என்பதை அறிந்துகொண்டால் சிகிச்சைக்கு எளிதாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடம் உண்டு. அதனால் கடித்த பாம்பைத் தேடி அலைந்து பிடிப்பார்கள் அல்லது அடித்துக்கொன்று தூக்கி வருவார்கள்.

உண்மையில், எந்த வகை பாம்பு கடித்தது என்பதற்கும் மருத்துவதற்கும் தொடர்பு இல்லை. பாம்பைப் பார்த்தவுடன் அதில் விஷம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் மருத்துவர்களால் கண்டறிய முடியாது. எனவே, பாம்பு கடித்தாலே உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். அதுவே சரி.

அதேபோல், முட்டை, மாமிசம் போன்றவைகளுக்கு ஈடான சத்துக்கள் இயற்கை உணவுகளில் இருப்பதாகச் சொல்வதும் உண்மை அல்ல. குறிப்பாக முட்டைக்கு இணையான புரோட்டீன் எதிலும் இல்லை.

புரோட்டீன் எனப்படும் புரதம்  என்பது உடலின் செல்கள் & திசுக்கள் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிக அவசியமான ஒன்று..புரதம் இல்லையெனில் சரியாக திசு வளர்ச்சி & செல்லுலார் ரிப்பேர் நடக்காது. புரதம் உடலின் சக்தி தேவைகளுக்கும் பங்களிக்கிறது.  ஒரு புரதத்தின் தரம் என்பது அதில் எத்தனை essential amino acids இருக்கும் என்பதை வைத்தே மதிப்பிடப்படும்.. ஒரு முட்டையில் அனைத்து essential amino acids acidsம் தேவையான அளவில் உள்ளது. அதனால்தான் அதை முட்டையை முழுமையான புரோட்டீன் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மற்ற இயற்கைப் பொருட்களிலும் புரதம் இருக்கலாமே தவிர, முட்டையின் அளவுக்கு இல்லை என்பதே உண்மை.



Leave a Comment