சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
பழம்
ஒவ்வொன்றும்
அதனதன் கதியில்
மெல்ல மெல்ல நிகழ்கிறது
மனமே….
நூறு வாளிகள்
நீர் ஊற்றினாலும்
பருவம் வரும்போதுதான்
பழம் பழுக்கும்
- கபீர்
வாழ்க்கை
மீனுக்காக கண்கள் வைத்து
காத்திருக்கிறது வலை
மூக்கு வைத்துக்
காத்திருக்கிறது நாரை
வாய் பிளந்து காத்திருக்கிறது
பெரிய மீன்
நாக்கு வைத்து காத்திருக்கிறது
தூண்டில் முள்.
இவற்றில் ஏதாவது ஒன்றில்
சிக்கி மீன் சாகத்தான் செய்கிறது
இவை அனைத்துக்கும்
தப்பி
மீன் வாழத்தான் செய்கிறது.
- அ. நிலாதரன்