மேயர் நிதி நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 328

மக்கள் சேவைக்கு முன்னிரிமை கொடுக்கும் அரசியல்வாதி, நேர்மையாளர் என்பதைத் தாண்டி மேயர் சைதை துரைசாமி தலைசிறந்த நிர்வாகி என்பதை பெருநகர சென்னையின் மேயராக இருந்த காலகட்டத்தில் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. பொதுவாக மேயராக வருபவர்கல் பகுதி நேரமாக மட்டுமே செயல்படுவார்கள் என்பதால், அதிகாரிகள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு கையெழுத்துப் போடுபவர்களாக மட்டுமே இருந்தார்கள். மேயர் சைதை துரைசாமி காலத்தில் எல்லாமே மாறிவிட்டது.

சைதை துரைசாமி பெருநகர சென்னையின் மேயர் பதவிக்கு வந்த காலட்டத்தில், எம்.எம்.டி.ஏ. காலனியில் பழுதடைந்த  ஒரு  திருமண மண்டபத்தை இடித்துவிட்டு  புதிய  மண்டபம்  கட்டுவதற்கு மாநகராட்சி மூலம் ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தது. அந்த குறிப்பிட்ட இடத்தை வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்குவதற்கு மாநகராட்சி 2.95 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

அரசு நடைமுறையில் இதுபோன்ற செயல்பாடுகள் வழக்கமாக நடப்பது தான். ஒரு துறையில் இருந்து வேறு ஒரு துறைக்கு உரிமம் மாறும் நேரத்தில் அதற்குரிய மதிப்பையும் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். வேறு ஒரு மேயர் என்றால், அதிகாரிகள் காட்டும் இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போயிருப்பார். ஆனால், மேயர் சைதை துரைசாமி எதையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போடுவதில்லை. அந்த கோப்புகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேட்டு தெளிவு அடைவார். ஏதேனும் சிக்கல் இருப்பது தெரிந்தால் திருத்தம் செய்த பிறகே கையெழுத்துப் போடுவார்.

எனவே, வீட்டு வசதி வாரியத்திடமிருந்து மாநகராட்சி திருமண மண்டப இடத்தை வாங்குவது குறித்த கோப்பினை முழுமையாகப் படித்துப் பார்த்து ஆய்வு செய்தார். அந்த நேரத்தில் அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று தெரியவந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment