Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : துன்பம் வரும் வேளையில் சிரிக்கச் சொல்கிறார்களே, அது சாத்தியமா? – பி.மதிவாணன், சூலக்கரை மேடு.

350 viewsOctober 1, 2024
0
gyaanaguru.com October 1, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 1, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 1, 2024 0 Comments

ஞானகுரு :

ஏதோ ஒரு நாட்டில் நடந்த விமான விபத்தில் 80 பேர் பலி என்ற செய்தியை, தேநீர் அருந்தியபடி எந்த சலனமும் இல்லாமல் உங்களால் படிக்க முடிகிறது. இது ஏன் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..?

அந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதனால் அவர்களுடைய துயரமும் துன்பமும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முகம் தெரியாத மூன்றாம் மனிதர்கள் போன்று  உங்கள் உறவு, சொந்தம் மற்றும்  நண்பர்களைத்  தள்ளி வைத்துப் பார்ப்பதே உண்மையான துறவு நிலை. இந்த நிலையை ஒவ்வொரு மனிதரும் அடைய முடியும்.

வாழ்க்கையில் துன்பம், இன்பம் என எதுவுமே நிஜம் இல்லை, நிலைத்திருக்கப் போவதும் இல்லை. இந்த உண்மை புரியாமல் தான் துன்பம் வந்ததும் மக்கள் அழுது புலம்புகிறார்கள். இந்த துன்பமும் கடந்துபோகும் என்ற உண்மை புரியாமல் அழுது புலம்பும் மனிதர்களைப் பார்த்துத்தான் சிரிக்கச் சொல்கிறார் திருவள்ளுவர். சிரித்துப் பழகுங்கள். வாழ்க்கை கைக்குள் வந்துவிடும்.

gyaanaguru.com Changed status to publish October 1, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US