புரிதல்
இறைவனும் மாயை என்று
ஒரு நாள் புரியும்.
அன்று நீங்கள்
கடவுளாகியிருப்பீர்கள்.
- க்ருஷ்ண லட்சுமி
ஆசை
போதி மரங்கள்
விற்பனைக்கு….
ஆசையில்லாதவர்கள்
அணுகவும்…!
- முருகானந்தம்
சும்மாயிரு
காற்றடிக்கும் திசையில்
பயணம்
சருகாயிருப்பதில்
சிரமமில்லை
- பாலாஜி
புரிதல்
இறைவனும் மாயை என்று
ஒரு நாள் புரியும்.
அன்று நீங்கள்
கடவுளாகியிருப்பீர்கள்.
ஆசை
போதி மரங்கள்
விற்பனைக்கு….
ஆசையில்லாதவர்கள்
அணுகவும்…!
சும்மாயிரு
காற்றடிக்கும் திசையில்
பயணம்
சருகாயிருப்பதில்
சிரமமில்லை