தொண்டையில் மீன் முள்ளு மாட்டிக்கிச்சா..?

சிம்பிள் டெக்னிக்

முள்ளு இல்லாத மீன் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், அப்படியொன்று கிடையாதே. வீட்டில் மீன் குழம்பு வைப்பதற்குத் தயங்குகிறார்கள். ஏனென்றால், மீன் முள் தொண்டையில் சிக்கிக்கொள்ளும் என்ற அச்சம்.

பொதுவாக மீன் முள் வயிற்றுக்குள் போய் விட்டால் அப்படியே ஜீரணமாகிவிடும், எனவே அதற்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், தொண்டையில் எங்கேனும் எசகுபிசகாக முள் சிக்கியிருப்பதுதான் பாடாய் படுத்தும். இருமல் வரும். ரத்தம் வருவது போன்று பயமுறுத்தும். தொண்டையில் அசெளகரியம் ஏற்படும்.

சரி, மீன் முள் எப்படியோ தொண்டையில் குத்திவிட்டது என்றால் எப்படி தடுத்து நிறுத்துவது..?

முதல் சிம்பிளான வழி. ஒரு கை நிறைய சோற்றை உருண்டை பிடித்து அப்படியே வாய்க்குள் போட்டு விழுங்குங்கள். தேவை என்றால் தண்ணீர் குடியுங்கள். மீன் முள்ளும் சேர்ந்து ஓடிவிடும்.

வாழைப்பழம் பெரிய துண்டு கடித்து வாயில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். எச்சில் சேர்ந்ததும் அப்படியே விழுங்குங்கள். வாழைப்பழத்துடன் மீன் முள்ளும் வழுக்கிக்கொண்டு வயிற்றுக்குள் போய்விடும்.

தண்ணீரை தொண்டையில் கொஞ்சநேரம் வைத்திருந்து விழுங்குங்கள். முள் உள்ளே போய்விடும்.

முள்ளை எடுக்கிறேன் என்று பதட்டப்பட்டு அல்லது பயப்பட்டு எசகுபிசகாக எதையும் செய்யாதீர்கள். அதாவது கை விரலை விட்டு எடுப்பது அல்லது ஸ்பூன் வைத்து குத்திப் பார்ப்பது போன்றவை வேண்டாம்.

சுகாதார பயிற்சியாளர்கள் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளை எடுக்க கார்பனேட்டேடு பானங்களைக் கொண்டு சிகச்சை அளிக்கிறார்கள். சோடா பருகும்போது, அதிலுள்ள வாயு தொண்டையில் சிக்கிய முள்ளுக்கு அழுத்தம் கொடுத்து வெளியேற்றி விட முடியும்.

தொண்டையை அழுத்தி பிடிப்பது, அழுத்துவது போன்ற செயல்களும் விபரீதமாகலாம். சாதாரணமாக தொண்டையில் குத்திய முள் தானாகவே வயிற்றுக்குள் போய்விடும். அது ஏற்படுத்திய சிராய்ப்பு புண்ணே சிரமம் கொடுக்கும். அந்த சிராய்ப்பு வலியைக் கண்டு மீன் முள் இன்னமும் இருக்கிறது என்று கவலைப்பட வேண்டாம்.

அதிகப்படியான ரத்த போக்கு, தொண்டையில் கடுமையான வலி, காயம் ஏற்படதாகத் தெரிந்தால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள். சுலபமாக எடுத்துவிடுவார்கள்.

Leave a Comment