கூவம் நதி சீரமைப்புக்கு 69 பணிகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 374

கூவம் நதி சீரமைப்பு என்பது வரலாற்றில் எழுதப்படும் வகையில் அமையவேண்டும் என்பதற்காகவே மேயர் சைதை துரைசாமி முழு முயற்சிகள் மேற்கொண்டார். அவரது முழு முயற்சி காரணமாக அன்றைய முதல்வர் அனுமதி கொடுத்ததும் பணிகள் தொடங்கின.

கூவம் நதியை சீரமைப்பு செய்வதற்கு 69 வகையான பணிகள் திட்டமிடப்பட்டன. இந்த  69 பணிகளுக்கும் சேர்த்து ரூ.1703 கோடி மற்றும்  இதர செலவு,  மேற்பார்வை செலவு, விலை உயர்வு ஆகியவைக்கு ரூ.231 கோடியும் சேர்த்து மொத்த  தொகை ரூ.1934.84 கோடிக்கு மேற்கொள்ள தமிழ் நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ஆணை பிறப்பித்தது. 

கூவம் சீரமைப்புக்கு இத்தனை பெரிய நிதி ஒதுக்கப்பட்டதற்கும், சிறப்பான முறையில் திட்டமிடலுக்கும் முக்கிய காரணகர்த்தவாக மேயர் சைதை துரைசாமி விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கூவம் நதியில் பொதுப் பணித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து மேற்கொள்ள இருக்கும் முக்கியப் பணிகள் இவைதான்.

1.  கூவம் நதியின் முகத்துவாரத்தில் நதியை ஆழப்படுத்துதல்

2. கூவம் நதியில் உள்ள சில்ட் மண் அகற்றுதல் மற்றும்  அகற்றப்பட்ட மண்ணை  குறிப்பிட்ட இடத்தில் கொட்டுதல்.

3.  நதியை அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல்

4.  நதியின்  மையப்பகுதியில்  சிறிய துளை  கால்வாய்  அமைக்கும் பணி

5. நதியின் இரு கரையோரங்களிலும் பண்ட் அமைக்கும் பணி

6. நதியின் இரு கரைகளையும் நிர்ணயம் செய்து,  கரையின் ஓரம் எல்லைக் கல்  அமைத்தல்.

7.  கூவம் நதியின் இரு பக்கமும் கட்டிடக் கழிவுகள் மற்றும் திடக் கழிவுகளை அகற்றுதல்.

8. கூவம் நதியின் இரு கரைகளிலும்  சுற்றுச் சுவர் அமைக்கும் பணி

9. கூவம் நதியில் குறிப்பிட்ட இடங்களில் பூம் சிஸ்டம் அமைத்தல்.

10.  நதியில் மிதக்கும்  ஆகாய தாமரை மற்றம் இதர  குப்பைகளைச் சேகரித்து, அந்த இடத்திலேயே அகற்றும் பணி

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம்  புதிதாக பாதாளக் கழிவு நீர் குழாய்கள்  அமைக்கவும், அவற்றை  ஓரிடத்தில்  சேர்க்கும் பணியும் நடைபெறுகிறது. அதேபோன்று  கூவம்  நதியில் விடப்பட்டுள்ள கழிவுநீர் பாதைகளை கண்டறிந்து  அடைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.  புதிதாக கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணியும் நடக்கிறது. கூவம் நதிக்கரை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்த இந்த திட்டம் இன்னமும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. எத்தனை பணிகள் நிறைவேறியுள்ளன, இன்னமும் எத்தனை நிறைவேற இருக்கின்றன என்பது போன்ற தகவல்கள் விரைவில் வழங்குகிறோம். அதேநேரம், இந்த திட்டம் எடுத்துக்கொண்ட வேகத்தில் முடிக்கப்பட்டால் கூவம் நதியிலும் படகு சவாரி செய்ய முடியும் என்பது உறுதி. மேயர் சைதை துரைசாமியின் கனவு நிறைவேறும் என்றே நம்புவோம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment