என்ன செய்தார் சைதை துரைசாமி – 171
பெருநகர சென்னை மேயராகப் பொறுப்பேற்ற சைதை துரைசாமி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு அதிக சலுகைகள் பெற்றுத்தந்தார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சென்ன மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 48 வகையான வசதிகள், சலுகைகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மாநகராட்சி மாணவர்களுக்குக் கூடுதலாக 34 சலுகைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்தார். மாநகராட்சிக் கூட்டம் நடக்கும் ஒவ்வொரு தருணத்திலும் மாணவர்களுக்கு ஏதேனும் புதிய சலுகை அறிவிப்பதை தொடர்ந்து செய்துவந்தார். அதனால் மேயர் சைதை துரைசாமியை, ‘கல்விதான வள்ளல்’ என்றே வரவேற்புரை கொடுத்தார்கள்.
அனைத்து சலுகைகளையும் குறிப்பிடாமல் முக்கியமான சில சலுகைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள், விலையில்லா பயண அட்டை, விலையில்லா புத்தகப் பை, 4 செட் சீருடைகள், 1 ஜோடி காலணி, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், கிரையான்கள், ஆய்வக மேலாடை, ஆய்வக கண் கண்ணாடி, செய்முறை பயிற்சி ஏடுகள், வரைபட நூல், தேர்வு வினா விடை புத்தகம், மழலையர்களுக்கு வண்ணச் சீருடைகள், கட்டாயக் கணினிக் கல்வி, சுகாதாரமான சானிடரி நாப்கின்கள், நாட்குறிப்பேடு, நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அதேபோல் மாணவர்களுக்கு உயர் கல்விக்கு ஊக்கத்தொகை, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு, வரலாற்று பகுதிகளுக்கு சுற்றுலா, நாளிதழ்கள், பருவ இதழ்கள், கம்ப்யூட்டர் வகுப்பறை, மாலை நேர சுண்டல், நீச்சல் பயிற்சி, ஓவியம் மற்றும் இசை பயிற்சி, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு பயிற்சி வகுப்புகள், உடல்நலப் பாதுகாப்பு, மனவளப் பயிற்சி என்று மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு புரட்சியே நடத்தினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.