என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 91
சென்னை மாநகராட்சியில் எல்லா காலகட்டங்களிலும் கொசு மருந்து தெளிப்பதும், கொசுவை கட்டுப்படுத்த புகை அடிப்பதும் நடந்துவருகின்றன என்றாலும், அந்த பணியை மிகவும் பயன் தரும் வகையில் செயல்படுத்த விரும்பினார் மேயர் சைதை துரைசாமி.
எனவே கொசுவை கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் பயன்படும் பூச்சிக் கொல்லிகள் போதிய நஞ்சுத் தன்மையுடனும், கொசுவை அழிக்கும் அளவுக்கு லிமையுடனும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தார். அதாவது கொசு ஒழிப்பதற்குப் பயன்படும் நஞ்சுகள் கொசுக்களை மட்டுமே அழிக்கவேண்டும், அதனால் மக்களுக்கு எந்த வகையிலும் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
பொதுவாக உணவு நஞ்சு, தொடு நஞ்சு, சுவாச நஞ்சு, நரம்பு நஞ்சு, இனப்பெருக்கம் தடுக்கும் நஞ்சு, கொசுவின் உணவை எதிர்க்கும் நஞ்சு போன்ற தன்மைகளில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொண்டார். சென்னை தவிர்த்த மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் எந்த வகையிலான நஞ்சு பயன்படுத்தி கொசு ஒழிக்கப்படுகிறது என்றும், அதற்கு எவ்வளவு செலவாகிறது என்றும், கிடைத்த ரிசல்ட் குறித்தும் அதிகாரிகளிடம் தீவிரமாக ஆய்வு செய்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்தார்.
மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனையின் அடிப்படையில் சென்னையில் உள்ள 17 லட்சம் வீடுகளை சுமார் 500 வீடுகள் கொண்ட 3,200 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு வட்டத்திலும் கொசுத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு மலேரியா தடுப்பு ஊழியர் நியமிக்கப்பட்டார். அந்த வகையில் மொத்தம் 3,200 தொழிலாளர்கள் கொசு ஒழிப்பு சிறப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர். அதுவரை, சென்னை மாநகராட்சியில், இப்படிப்பட்ட மாபெரும் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை எனலாம்.
- நாளை பார்க்கலாம்