சாதித்துக் காட்டிய தி.மு.க.
தி.மு.க. மேற்கொண்ட தொடர் சட்டப்போராட்டம் காரணமாக மருத்துவப் படிப்புகளில் பிறபடுத்தபட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்த நாள் இது என்று தி.மு.க. கொண்டாடி வருகிறது.
இதுகுறித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், ‘’தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்கு நான் மேற்கொண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு சென்னை நீதிமன்றம் 27.7.2020 அன்று உத்திரவிட்டது.
ஆனாலும், அதனை மதிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று தர நான் வாதாடிய பின்பு நீட் தேர்வை நீதி மன்ற உத்திரவின் மூலம் நிறுத்திய பின்பு அதற்கு பயந்து, பணிந்த மோடி அரசு, வேறு வழியின்றி, ஜூலை 29 2021, அன்று மருத்துவக் கல்விக்கான அனைத்திந்தியத் தொகுப்பிற்கு மாநில அரசுகள் தரும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு தர ஒப்புக்கொண்டது.
உச்ச நீதி மன்றதிலும் தலைவர் அறிவூறுத்தலின் பேரில் நான் ஆஜராகி இடஓதுகீடு தந்தது சரியே என வாதிட்டு வெற்றி பெற்றேன். சட்டப்போராட்டத்தின் விளைவாக இந்தியா முழுவதும் உள்ள 5,022 க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வி எனும் பெருங்கனவு ஆண்டுதோறும் நிறைவேறி வருகிறது.
ஆண்டுதோறும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு வரை சுமார் 15,066 இடங்களை மருத்துவ படிப்பில் இந்த வழக்கின் மூலமாக இதர பிறபடுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெற்று தந்திருக்கிறாம்.
சமூகநீதியில் மகத்தான வெற்றி பெற்ற மூன்றாவது ஆண்டில் இன்று நாம் நுழைகிறோம். வெற்றித் திருநாள் இன்று. இருளை நீக்கிய நன்னாள் இன்று. நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் கழகத் தலைவரின் உழைப்பைப் போற்றும் மகத்தான நாள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.