கேள்வி : நான் நல்லவனா… கெட்டவனா என்பதை எப்படி அறிந்துகொள்வது? – பி.ராமலிங்கம், மெயின் பஜார், சீர்காழி.
ஞானகுரு :
நீங்கள் செத்துப்போனால் எளிதாக தெரிந்துகொள்ளலாம். அதற்காக நிஜமாக சாக வேண்டியதில்லை. கண்ணை மூடிக்கொண்டு, மரணம் வந்துவிட்டதைப் போல் நினைத்துப் பார்த்தால் போதும்.
ஆம், கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு கண்களை மூடுங்கள். உடலில் இருந்து உயிரைப் பிரித்து, உங்கள் உடலையே நீங்கள் வேடிக்கை பாருங்கள். உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாம் உங்கள் மரணத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்று மனதினுள் கற்பனை செய்து பாருங்கள்.
உங்கள் எதிரிகள் என்ன நினைப்பார்கள், உங்களுடன் பணி புரிபவர்கள் என்ன பேசுவார்கள் என்றெல்லாம் அவர்கள் பார்வையில் யோசித்துப் பாருங்கள். யாராவது ஒரே ஒருவராவது உங்கள் மரணத்துக்காக சந்தோஷப்படலாம் என்று நீங்களே நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் கெட்டவர்.
gyaanaguru.com Changed status to publish September 14, 2024